ராஜாவாக மாறும் விஜய்

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்திற்கு மாரீசன், கருடா என்று தலைப்புகள் வைத்திருப்பதாக செய்திகள் வெளியானபோதும், சம்பந்தப்பட்டவர்கள் இன்னும் அதை உறுதிப்படுத்தவில்லை. அதேசமயம், நல்ல டைட்டிலை அவர்கள் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அஜீத்தின் என்னை அறிந்தால் படத்தின் டைட்டிலை உடனடியாக அறிவிக்காமல் ரசிகர்களை எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கியதுபோல், விஜய்யும் தனது ரசிகர்களை எதிர்பார்க்க வைத்து புதிய பட தலைப்பை அறிவிக்க திட்டமிட்டுள்ளாராம். மேலும், சமீபகாலமாக அதிரடி ஆக்சன் படங்களாக நடித்து வரும் விஜ்ய, இந்த படம் சரித்திர பின்னணி கொண்டது என்பதால், இரண்டில் ஒரு வேடத்தில் அரசர் கெட்டப்பில் வருகிறாராம்.
அப்படி அவர் தோன்றும் அந்த காட்சிகள் முந்தைய ஜென்மத்தில் அவர் ராஜாவாக ஆண்ட காலகட்டத்தில் நடக்கிறதாம். அதனால் முதன்முறையாக அரசர் கெட்டப்பில் காஸ்டியூம் அணிந்து நடிக்கும் விஜய், வாள் சண்டையும் போடுகிறாராம். அந்த காலகட்டத்தில்தான் ஸ்ரீதேவி, ஹன்சிகா இடம்பெறும் காட்சிகளும் வருகிறதாம். அதனால் அவர்களும், ராணி, இளவரசி கெட்டப்பில்தான் நடிக்கிறார்களாம். அந்த முந்தைய ஜென்ம காட்சிகளில் விஜய்யை சந்திக்கும் ஹன்சிகாவுக்கு அவர் மீது காதல் வருவதுபோல் காட்சிகளும், பாடலும் உள்ளதாம். மற்றபடி நிகழ்கால கதாபாத்திரத்தில் நடித்துள்ள விஜய் தனது வழக்கமான கெட்டப்பிலேயே நடிக்கிறாராம். அதேபோல் ஸ்ருதிஹாசனும், கவர்ச்சிகரமாக நடிக்கிறாராம்.