கண்களைச் சுற்றி
ஈரப்பதம் கண்களைச் சுற்றியுள்ள இடம் மிகவும் மென்மையானது. முகத்திலேயே அது தான்
மிகவும் மென்மையான இடமும் கூட. இவ்விடத்தில் எவ்வித எண்ணெய் சுரப்பிகளும் இல்லை.
ஆகவே தினமும் இரவில் கண்களைச் சுற்றி ஜெல் அல்லது கோல்ட் க்ரீம் தடவி மசாஜ் செய்ய
வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கண்களைச் சுற்றி கோடுகள், சுருக்கங்கள்
மற்றும் கருவளையங்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
ஃபேஷ் வாஷ்
வேண்டாம் கண்களுக்கு போட்டுள்ள கண்மையை நீக்க, சாதாரணமாக முகத்தைக் கழுவ பயன்படுத்தும் ஃபேஷ்
வாஷ் பயன்படுத்தி கழுவும் பழக்கத்தைக் கைவிட வேண்டும்.
ஏனெனில் ஃபேஷ் வாஷைப் பயன்படுத்தும் போது, அவை கண்களுக்கு அடியில் அரிப்பு மற்றும் வறட்சியை ஏற்படுத்தும். ஆகவே கண் மையை நீக்க ஈரமான பஞ்சினைக் கொண்டோ அல்லது டிஷ்யூ பேப்பரைக் கொண்டோ அல்லது ஸ்பெஷல் ஐ மேக்கப் ரிமூவரைக் கொண்டோ துடைத்து எடுக்கவும். முக்கியமாக மென்மையாக துடைத்து எடுக்க வேண்டும்.
ஏனெனில் ஃபேஷ் வாஷைப் பயன்படுத்தும் போது, அவை கண்களுக்கு அடியில் அரிப்பு மற்றும் வறட்சியை ஏற்படுத்தும். ஆகவே கண் மையை நீக்க ஈரமான பஞ்சினைக் கொண்டோ அல்லது டிஷ்யூ பேப்பரைக் கொண்டோ அல்லது ஸ்பெஷல் ஐ மேக்கப் ரிமூவரைக் கொண்டோ துடைத்து எடுக்கவும். முக்கியமாக மென்மையாக துடைத்து எடுக்க வேண்டும்.
கை வைத்தியம்
தினமும் வெள்ளரிக்காய் துண்டை கண்களின் மேல் 10 நிமிடம் வைக்க வேண்டும். அல்லது நீரில் ஊற
வைத்த டீ பேக்கை ப்ரிட்ஜில் 10 நிமிடம் வைத்து,
பின் கண்களின் மேல் வைக்க
வேண்டும். இப்படி செய்து வந்தால், கண்களில் உள்ள
சோர்வு நீங்கி, கண்கள்
புத்துணர்ச்சியுடன் கருவளையங்கள் இல்லாமல் இருக்கும்.
நல்ல தூக்கம்
தூக்கமின்மை கருவளையங்களை ஏற்படுத்தும். எனவே தினமும் தவறாமல் 7-8 மணிநேர தூக்கத்தை மேற்கொள்ள வேண்டும். இப்படி
செய்வதால் பாதிக்கப்பட்ட சரும செல்கள் புதுப்பிக்கப்பட்டு, முகம் பொலிவோடு புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
பால் தினமும் 2-3 மூன்று முறை முகத்தை பால் கொண்டு துடைத்து,
முக்கியமாக கண்களைச்
சுற்றி துடைத்து எடுத்தால், அழுக்குகள்
அனைத்தும் நீங்குவதோடு, பாலில் உள்ள
இயற்கையான எண்ணெய் கண்களைச் சுற்றியுள்ள இடங்களுக்கு ஈரப்பதத்தை வழங்கும்.