மைனா புகழ் அமலாபால், ஏ.எல்.விஜய் இயக்கிய தெய்வத்திருமகள் படத்தில் நடித்தபோது அவரை காதலிக்கத் தொடங்கினார். அதன்பிறகும், ஏ.எல்.விஜய் இயக்கிய தலைவா படத்தில் விஜய்யுடன் டூயட் பாடும் வாய்ப்பினை பெற்றார். அந்த படத்திற்கு பிறகு டைரக்டர் விஜயை திருமணம் செய்து கொண்டார். அதனால் தமிழில் கமிட்டான சில படங்களில் இருந்து வெளியேறிய அமலாபால், தனது தாய்மொழியான மலையாளத்தில் மட்டும் நடிப்பதை நிறுத்தவில்லை.
இப்போதும் லைலா ஓ லைலா, மிலி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதனால் சென்னையில் இருப்பதை விட கேரளாவில்தான் அவர் அதிக நாட்கள் தங்கியிருநது நடித்துக்கொண்டிருக்கிறார்.
இந்தநிலையில், கேரளாவிலுள்ள ஒரு நகைக்கடையின் விளம்பரத்தில் நடிப்பதற்காக ரூ. 30 லட்சம் வாங்கிய அமலாபால் பின்னர் அந்த விளம்பர படத்தில் நடிக்க ஏனோ மறுத்து விட்டாராம். அதனால் அந்த நகைக்கடையின் உரிமையாளர் அவர் மீது எர்ணாகுளம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தாராம். அதை விசாரித்த நீதிபதி, ஒப்பந்தத்தை மீறிய அமலாபால் இனிமேல் எந்த விளம்பர படத்திலும் நடிக்கக்கூடாது என்று தடைவிதித்து விட்டாராம். இதனால் பலத்த அதிர்ச்சியில் இருக்கிறார் அமலாபால். இதையடுத்து, தன்பக்கமுள்ள நியாயத்தை கோர்ட் முன்பு வைத்து, மேல்முறையீடு செய்ய அமலாபால்தரப்பு திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
இப்போதும் லைலா ஓ லைலா, மிலி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதனால் சென்னையில் இருப்பதை விட கேரளாவில்தான் அவர் அதிக நாட்கள் தங்கியிருநது நடித்துக்கொண்டிருக்கிறார்.
இந்தநிலையில், கேரளாவிலுள்ள ஒரு நகைக்கடையின் விளம்பரத்தில் நடிப்பதற்காக ரூ. 30 லட்சம் வாங்கிய அமலாபால் பின்னர் அந்த விளம்பர படத்தில் நடிக்க ஏனோ மறுத்து விட்டாராம். அதனால் அந்த நகைக்கடையின் உரிமையாளர் அவர் மீது எர்ணாகுளம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தாராம். அதை விசாரித்த நீதிபதி, ஒப்பந்தத்தை மீறிய அமலாபால் இனிமேல் எந்த விளம்பர படத்திலும் நடிக்கக்கூடாது என்று தடைவிதித்து விட்டாராம். இதனால் பலத்த அதிர்ச்சியில் இருக்கிறார் அமலாபால். இதையடுத்து, தன்பக்கமுள்ள நியாயத்தை கோர்ட் முன்பு வைத்து, மேல்முறையீடு செய்ய அமலாபால்தரப்பு திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.