மூளையை பாதிக்கும் நடவடிக்கைகள்.

இன்றைய நவீன,அவசர உலகில் நமது மூளையை பாதிக்கும் அன்றாட பழக்கவழக்கங்கள் பலவற்றை நம்மை அறியாமலே செய்கிறோம்.அவற்றில் சிலவற்றை ஆராய்வோமானால்,

*காலையில் உணவு உண்ணாமல் இருப்பது
காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.
* தூக்கமின்மை
   நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான       அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.

* கைத்தொலைபேசி
   அதிகமாக கைத்தொலைபேசி பாவனையாலும் மூளை பாதிக்கப்படும்.

* மிக அதிகமாகச் சாப்பிடுவது
   இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின்        சக்தி குறைவுக்குக் காரணமாகும்.

* புகை பிடித்தல்
   மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.

* நிறைய சர்க்கரை சாப்பிடுதல்
   நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத்                  தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.

* மாசு நிறைந்த காற்று
   மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை            நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன்                              செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.

* தலையை மூடிக்கொண்டு தூங்குவது
  தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு                  அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது.  குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.

* நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது
   உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும்,    தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால்,   மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.

* மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது,

  மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை                                            மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன.              இதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.

* பேசாமல் இருப்பது
   அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின்                          வலிமையை அதிகரிக்கிறது