பூலோகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பூலோகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திரிஷாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு: படப்பிடிப்புகளை ரத்து செய்தார்

திரிஷாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. இதனால் படப்பிடிப்புகளை ரத்து செய்துள்ளார். திரிஷா கடந்த சில நாட்களாக பிசியாக நடித்து வந்தார். இரவு பகல் படப்பிடிப்புகள் நடந்ததால் சோர்வடைந்தார். காய்ச்சலும் ஏற்பட்டது. தொடர்ந்து படப்பிடிப்பில் பங்கேற்க முடியவில்லை. டாக்டரை சந்தித்து காய்ச்சலுக்கு மருந்து மாத்திரை எடுத்து கொண்டார்.

தற்போது மருத்துவர் அறிவுரைப்படி வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். கடந்த 10 நாட்களாக படுக்கையிலேயே ஓய்வு எடுத்து வருகிறார். திரிஷா தற்போது அஜீத்துடன் ‘என்னை அறிந்தால்’, ஜெயம் ரவியுடன் ‘அப்பாடக்கர்’ மற்றும் மணிமாறன் டைரக்டு செய்யும் பெயரிடப்படாத படம் போன்றவற்றில் நடிக்கிறார்.

இங்கிலாந்தில் 70 தியேட்டர்களில் விஜய்யின் கத்தி!

விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவான துப்பாக்கி மெகா ஹிட்டாக அமைந்ததால், இப்போது அவர்கள் இணைந்துள்ள கத்தி படத்திற்கும் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் எகிறிக்கொண்டிருக்கிறது. அதோடு, தீபாவளிக்கு ஐ படமும் வராது என்றாகி விட்டதால் விஜய்தான் தீபாவளி ரேசில் நம்பர்ஒன்றாக இருக்கப்போகிறார்.

மேலும், விஷாலின் பூஜை படத்திற்கும் ஏற்கனவே முக்கிய தியேட்டர்கள் கைப்பற்றப்பட்டு விட்டபோதும், விஜய் படத்துக்கு தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை 450 தியேட்டர்கள் கிடைத்திருப்பதாக சொல்கிறார்கள். இன்னும் தியேட்டர்களை கைப்பற்றும் வேலைகளும் துரிதமாக நடந்து கொண்டிருக்கின்றன.

விஜய் ரசிகர்களின் பொறுமையை சோதிக்கும் கத்தி ட்ரெய்லர்!

தீபாவளிக்கு பலத்த போட்டி இருக்கும் என்று எதிர்பார்த்து வந்த நிலையில், தற்போது விஜய்யின் கத்தி, விஷாலின் பூஜை மட்டுமே உறுதிபடுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையே ஜெயம்ரவியின் பூலோகமும் வரக்கூடும் என்கிறார்கள். மேலும், கத்தியின் டீஸர் வெளியாகி அதை 2 மில்லியனுக்கும மேற்பட்ட ரசிகர்கள் பார்த்ததாக கூறுகிறார்கள்.

இந்த நிலையில் கத்தி ட்ரெய்லர் எப்போது வரும் என்று தவம் கிடக்கிறார்கள் விஜய்யின் ரசிககோடிகள், ஆடியோ ரிலீஸில் இருந்தே டிரெய்லரை வெளியிட்டு விடுவார்கள் என்று எதிர்பார்த்த ரசிகர்கள், படமே தீபாவளிக்கு வெளியாகப்போகிறது என்கிறார்கள். பிறகு ஏன் இன்னமும ட்ரெய்லரை வெளியிடவில்லை என்று விஜய்யின் சமூக வலைதளத்திற்குள் புகுந்து கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

“மெட்ராஸ் - பூலோகம்” ஒரு ஏரியா கதையாமே....!

கார்த்தி, கேத்தரின் தெரேசா மற்றும் பலர் நடிக்க 'அட்டகத்தி' பா.ரஞ்சித் இயக்கியுள்ள 'மெட்ராஸ்' படமும், ஜெயம் ரவி, த்ரிஷா மற்றும் பலர் நடிக்க அறிமுக இயக்குனர் கல்யாணகிருஷ்ணன் இயக்கியுள்ள 'பூலோகம்' படமும் ஒரே கதையில்தான் உருவாக்கப்பட்டுள்ளதாம். இரண்டு படங்களுமே வட சென்னையை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் தயாராகியுள்ளன. ஒரு சாதாரண இளைஞன் எப்படி சிறந்த பாக்சிங் வீரனாகிறான் என்பதுதான் படத்தின் கதையாம்.

இரண்டு படங்களுமே வெளியீட்டுக்குத் தயாராகி பல மாதங்களாகியும் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுக் கொண்டே வருகிறது.