காக்கையாரே காக்கையாரே... இலங்கை சிறுவர்பாடல்

காக்கையாரே காக்கையாரே  எங்கே போனீர்?

காணாத இடமெல்லாம் காண போனேன்
கண்டு வந்த புதுமைகளை சொல்ல கேளும்
செட்டியார் வீட்டில் கல்யாணம்
சிவனார் கோவிலில் விழா கோலம்
மீன் பிடி துறையில் ஜன கூட்டம்
மேரியின் வீட்டில் கொண்டாட்டம்.
கண்டி பக்கம் குளிரோ கொடுமை
காங்கேசன் துறையில் வெயிலோ கடுமை.

அப்பா,மாமா,அத்தான் கொழும்பில்
அவர்கள் சுகத்தை அறிவீரோ?
பொங்கல் அன்று வருவாராம்
புத்தகம் வாங்கி தருவாராம்
பந்தும் கொண்டு வருவாராம்
பாவை உனக்கு தருவாராம்.