வெந்நீரின் நன்மைகள்.

பொதுவாக நகரங்களில் உள்ளவர்கள் குளிர்ந்த நீரை (ஐஸ் வாட்டர்) அருந்துவதை ஒரு பேஷனாக வைத்திருக்கிறார்கள். ஆனால் வெந்நீர் அருந்துவதன் மூலம் பல நோய்களில் இருந்து பாதுகாக்கப்படுவதுடன் இன்னும் பல நன்மைகளும் உள்ளன.அவற்றில் சிலவற்றை ஆராய்வோமானால்,

* வெந்நீர் குடித்தால் நெஞ்செரிவு மறையும்.

* அடிக்கடி வெந்நீர் குடிப்பவர்களுக்கு  உடலில் கொழுப்பு  சேராமல்  கரையும். அஜீரணத்தால் ஏற்படும் தலைவலி வரவே  வராது

* தடுமலின் போது வெந்நீர் பருகுவதால் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பலாம்.
* வெயிலில் போய் வந்த பின் வெந்நீர் பருகுதல் தாகம் தீர்ப்பதோடு                            தேவையற்ற நோயை சேர்க்காது.

* சுக்கு கலந்த வெந்நீரை அடிக்கடிக் குடித்து வந்தால் வாயுத் தொல்லையே            இருக்காது.

* வெந்நீர் ரத்தத்தில் உள்ள நஞ்சை வெளியேற்றுகிறது.

* வயிற்றுப் புண்ணினால் ஏற்படும் வலியைக் குறைக்க, மிதமான வெந்நீரை        கொஞ்சம் கொஞ்சமாகக் குடிப்பது நல்லது.

* நல்ல பலமான விருந்து சாப்பிட்ட பிறகு வெந்நீரைக் குடித்தால் சாப்பிட்ட         விருந்தானது எளிதில் ஜீரணமாகி விடும்.

* மிருதுவான சருமம் பெற பார்லி ஒரு தேக்கரண்டி போட்டு வேகவிட்ட                  வெந்நீரை அடிக்கடி குடித்து வர வேண்டும்.

* கால்கள் பொறுக்கும் அளவுக்கு வெந்நீரை ஒரு வாளியில் விட்டு அதில் கல்      உப்பையும் போட்டுக் கலந்து அந்த வெந்நீரில் கால் பாதங்களை 15                          நிமிடங்கள் வைத்து எடுத்தால் கால் வலி குறையும்.

* பித்தவெடிப்பு உள்ளவர்கள் வெந்நீரில் கால் பாதங்களை வைத்து எடுத்த             பிறகு, பாதங்களை பியூமிஸ் ஸ்டோன் கொண்டு தேய்த்தால் நாளடைவில்       பித்த வெடிப்பு குணமாகி விடும்.

* தாகம் எடுத்தால் பச்சைத் தண்ணீரைக் குடிக்காமல், பொறுக்கும் அளவு               சூடான வெந்நீரைக் குடித்து வந்தால் உடம்பில் உள்ள வேண்டாத கழிவுகள்       வெளியேறும்.

* சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பு ஒரு டம்ளர் வெந்நீர் குடித்து                  வந்தால் உடல் எடை குறையும்.