கறிவேப்பிலையின் நன்மைகள்.

நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாப்பிட்டு ந்தால் நீரிழிவு நோயாளிகளின் த்தத்தில் ர்க்கரையின் அளவு குறையும்.

நரை முடி உள்ளவர்கள் உணவிலும்னியாகவும் றிவேப்பிலையை திகமாக சாப்பிட்டு ந்தால் நரை முடி மறையும்.அதே போல் கறிவேப்பிலையை எண்ணெயில் போட்டு காய்ச்சி ஆறவைத்து பாட்டிலில் அடைத்து தலையில் தேய்த்து வந்தால் இளநரை மாறும்.
கறிவேப்பிலையை நிழலில் உலர்த்தி காய வைத்து பொடியாக்கி கஷாயம் செய்து காலை மாலை குடித்து வந்தால் உடலில் சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்கும்.

வெறும் வயிற்றில் ‌தினமும் 3 மாதங்களுக்கு கறிவேப்பிலை இலையை மென்று  சாப்பிட்டு வந்தால் சிறுநீரில் சர்க்கரை வெளியேறும் அளவும் குறைந்துவிடும். அத்துடன் நீரிழிவால் உடல் பருமனாவது விர்க்கப்படும்.

சுண்ணாம்புச் சத்தும் இரும்புச் சத்தும், வைட்டமின் , பி, பி2, சி போன்ற உயிர்சத்துக்களும் கறிவேப்பிலையில் அதிகம் உள்ளன.

கறிவேப்பிலையை நன்கு நீரில் அலசி அதனுடன் சிறிது இஞ்சி, சின்ன வெங்காயம், 2 பூண்டு பல், சீரகம், புதினா அல்லது கொத்தமல்லி கலந்து நன்கு அரைத்து அதனுடன் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து நன்கு கலக்கி மதிய உணவில் சாதத்தோடு கலந்து சாப்பிட்டு வந்தால் மன உளைச்சல்,மன இறுக்கம், மன அழுத்தம் குறைந்து குழப்பமான மனநிலை மாறும். மேலும் உடலை புத்துணர்வு பெறச் செய்து ஞாபக சக்தியையும் தூண்டும்.

ஒரு லிட்டர் எண்ணெயில் 10 கறிவேப்பிலை போட்டு காய்ச்சி வடிகட்டினால் எண்ணெயில் உள்ள கொழுப்புச் சத்து நீங்கும்.அதே போல் கருவேப்பில்லை சாற்றை சிவப்பரிசியில் ஊற்றி கஞ்சி குடித்தால் உடலின் கொழுப்புச் சத்து குறையும்.

சிலருக்கு உணவு உண்ணும்போது அதில் அதீத சுவை இருந்தாலும் கூட அதை அவர் நாவினால் உணர முடியாது. இவர்கள் கறிவேப்பிலை, சீரகம், இஞ்சி, சிறிதளவு பச்சை மிளகாய், புளி, உப்பு, பூண்டு இவைகளை நன்கு அரைத்து சூடான சாதத்தில் கலந்து சாப்பிட்டு வந்தால் நாவிற்கு சுவையை உணரும் தன்மை கிடைக்கும்.

மது போதையில் தள்ளாடுபவர்களுக்கு கறிவேப்பிலையின் சாறு கொடுத்தால் போதை உடனே குறையும்.

கருவேப்பிலை மற்றும் முலிகைகளை சாப்பிட்டால் கேன்சர் போன்ற கொடிய வியாதியைக் குணப்படுத்த உதவும்என்று ஆஸ்திரேலியாவில் இருக்கும் ஒரு ஆராய்ச்சி நிலையம் கூறியுள்ளது.