கைத்தொலைபேசியின் தீமைகள்.

இந்த நவீன காலத்தில் உங்களுக்கு தெரியாமலே உங்கள் உடலின் ஒரு பகுதி போல கைத்தொலைபேசி உங்களுடன் ஒன்றி விட்டது.அதன் மூலம் பல நன்மைகள் இருந்தாலும் அதே அளவுக்கு தீமையும் உண்டு, என்பதை யாராலும் புறகணிக்க முடியாத ஒன்றாகும்.

இத்துடன் வீடுகளுக்கு அருகில் மொபைல் போன் டவர்களை வைப்பதால் அதிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு காரணமாக புற்று நோய் உள்ளிட்ட பாதிப்புகள் வருவதாகவும் புற்றுநோயாளிகளுக்கு கதிர்வீச்சு மருந்தாக பயன்படுத்தப்பட்டாலும் அது எந்த அளவுக்கு உடலுக்குள் போக வேண்டுமோ அது மீறி விடக் கூடாது. மீறும்போதுதான் அதிக பாதிப்பு உள்ளதாகவும்
பாபா அணு ஆய்வுக் களத்திலுள்ள ஸ்ரீகுமார் பானர்ஜி என்பவர் கூறியுள்ளார்.

கிரீஷ் குமார் என்பவர் எப்படி அதிகம் காபி சாப்பிட்டால், ஊறுகாய் சாப்பிட்டால் புற்றுநோய்க்கான வாய்ப்புகள் உள்ளதோ அதேபோல கதிர்வீச்சாலும் புற்று நோய் பாதிப்பு அதிகம் வருவதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளதாக கூறினார்

தொடர்ந்து செல்போனில் பேசிக் கொண்டே இருந்தால் காது சவ்வு கிழிந்து காது ஓட்டையாகிப் போய் விடுமாம். மேலும் காது நரம்புகளும் பாதிக்கப்பட்டு காது கேக்காதாம்.

கைத்தொலைபேசி கதிர் வீச்சில் இருந்து ஓரளவு பாதுகாக்கப்படுவதற்கான வழி முறைகள்.

*அதிகமானவர்கள் தூங்கும் போதும் தொலைபேசியை அருகிலேயே வைத்து துங்குவார்கள். நீங்கள் துங்கும் அந்நேரமும் உங்களுக்கு கதிர்வீச்சுத் தாக்கம் இருக்கும்.
*வெளியே செல்லும் நேரங்களைத் தவிர்ந்த ஏனைய நேரங்களில் கைத்தொலைபேசிகளை தள்ளியே வையுங்கள்.
*அதிகநேரம் பேசவேண்டி உள்ள சந்தர்ப்பங்களில் இயர்போனை (headset) பயன்படுத்துங்கள். இயர்போனை (headset) பயன்படுத்தும் சந்தர்ப்பங்களில் கைத்தொலைபேசியை கையிலேயே வைத்திருங்கள்.
*வீட்டிலிருக்கும் நேரங்களில் தரை இணைப்பு தொலைபேசிகளை பயன்படுத்துங்கள்.
*நீங்கள் தேவையில்லை என்று கருதும் நேரங்களில் செயற்ப்பாட்டை நிறுத்தி வையுங்கள். *