ஆரோக்கியமான இளநீர்.

இந்த நவீன காலத்தில் அனைவரும் தாகத்திற்கு செயற்கை குளிர் பானங்களையே  விரும்பி குடிக்கின்றனர்.இது ஒரு பழக்கமாகவே சென்றுவிட்டது என்பதோடு இதுவே நாகரீகமாகவும் மாறி விட்டது.ஆனால் அந்த குளிரூட்டப்பட்ட செயற்கை குளிர்பானங்களில் “கார்பனேட்டட் வாட்டரும்”, காற்றும் தான் செயற்கையாக அடைக்கப்படுகிறது. இதில் உடலுக்கு தேவையற்ற கலோரிச் சத்துக்கள் அதிகமாக இருப்பதால் உடல் குண்டாகும். எலும்புகள் பலவீனமடையும். குடற்புண் உண்டாகும். இவையெல்லாம் தொடர்ந்து குடிப்பதில் பல பக்க விளைவுகள் உண்டு.ஆனால் இளநீரில் எந்த பக்க விளைவும் இல்லை.மாறாக நன்மையே உண்டு.

இளநீரை வெட்டிய உடனே குடித்துவிடுவது தான் நல்லது. இரண்டு அல்லது மூன்று மணி நேரங்கள் வைத்திருப்பதோ, குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்து குடிப்பதோ அதன் மருத்துவக் குணங்கள் மந்தப்படுத்தக் கூடும். வேண்டுமானால் அரை மணிநேரம் வைக்கலாம். இதில் எதனையும் கலந்து குடிக்கக் கூடாது.

இளநீரில் சோடியம் குளோரைடு, பொட்டாசியம், தாது உப்புக்கள், நீர்ச்சத்து, கால்சியம், உப்புச்சத்து, வைட்டமின்கள் என்பன நிறைந்திருக்கின்றன.
இளநீரில் இருக்கின்ற உப்புச் சத்து நம் உடலில் வெப்ப நிலையை சமச்சீராக பாதுகாப்பதோடு, வெப்பநிலையை சரிவர உள் வாங்கி முறையே வெளித்தள்ளுகிறது. இதனால் வேனல்பிடிப்பு, வேனல் அதிர்ச்சி, அயர்ச்சி போன்ற கோடையின் ஆபத்தான விஷயங்கள் இல்லாமல் போகிறது.

இளநீர் குடிப்பவர்கள்  இளமையாக இருப்பர்.குறிப்பாக கோடைக்காலங்களில் உப்புச்சத்தும், நீர்ச்சத்தும், இன்ன பிற பொதுவான சத்துக்களும் வியர்வை மூலமாக உடலில் உள்ள உப்பு வெளியேறிவிடுவதால் மயக்கம், உடல் வெளிறிவிடும். நாடித்துடிப்பு தளர்வு, தசைகள் இறுகுவது என்பன ஏற்படும்.
சர்க்கரை நோயாளிகள் குறைவாக குடிக்கலாம். சிறுநீரக செயலிழப்பு நோயாளிகள் குடிக்கக் கூடாது. இதய நோயாளிகளுக்கு இளநீர் நல்லதாகும்.