அதிருப்தியை ஏற்படுத்தும் அமரகாவியம் சத்யா!

அட்டகத்தி படத்தில் நடித்த தினேஷ் அதன்பிறகு குக்கூ படத்தில் நடித்தபோதுவரை மீடியாக்களோ, சினிமாத்துறையினரோ யார் தன்னை அலைபேசியல் தொடர்பு கொண்டாலும் உடனே அட்டன் பண்ணுவார். ஆனால் குக்கூ படத்தின் வெற்றிக்கு பிறகு மீடியாக்கள், சினிமாக்காரர்களை விட்டு விலகியே நிற்கிறார்.

அவரை தொடர்பு கொள்ளவே முடியவில்லை என்றொரு குற்றச்சாட்டு இருந்து கொண்டிருக்கிறது. இந்தநிலையில், புத்தகம், அமரகாவியம் படங்களில் நடித்த ஆர்யாவின் தம்பி சத்யாவும், இப்போது தினேஷின் பட்டியலில் சேர்ந்துள்ளார். அவரை எப்போது யார் தொடர்பு கொண்டாலும், அவர் அட்டன் பண்ணுவதே இல்லை.
இந்தநிலையில், அவரை வைத்து படம் இயக்கியுள்ள சிலரிடம் கேட்டபோது, மீடியாக்களை மட்டுமல்ல, அவரை வைத்து படம் பண்ணுபவர்களே அவரை அத்தனை எளிதில் தொடர்பு கொள்ள முடிவதில்லை. அதோடு படப்பிடிப்பு தளத்திற்கும் குறித்தபடி வரமாட்டார். சில முன்னணி ஹீரோக்கள் வருவது மாதிரி தாமதமாகத்தான் வருவார். நடித்த இரண்டு படங்களுமே ஓடவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில், அவர் காட்டும் அலட்சியம் அவர் மீது அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது என்கிறார்கள்.