ரஜினி குடும்பத்தில் ஒருவரானேன் தீபிகா படுகோனே பெருமிதம்.

ரஜினியுடன், 'கோச்சடையான்' படத்தில் நடித்த போது, ரஜினி, தன்னை மகளை போலவே கவனித்து வருவதாக கூறினார், தீபிகா படுகோனே. அதையடுத்து, ரஜினியின் மகள்களான ஐஸ்வர்யா, சவுந்தர்யா ஆகியோரிடமும், நெருக்கமாகி விட்டதாக சொல்லும் அவர், 'ரஜினி - லதா தம்பதி, தன்னையும் தங்களின் மற்றொரு மகளாக நினைப்பதாக கூறுகிறார்.

மேலும், 'இப்போதெல்லாம் நான் சென்னை வந்தால், ரஜினியின் வீட்டிற்கு செல்லாமல் மும்பை திரும்புவதில்லை. அதேபோல், ரஜினி குடும்பத்தினர்மும்பை வந்தால், முதலில் என் வீட்டிற்கு தான் வருவர். அந்த அளவுக்கு, 'கோச்சடையான்' படம், எங்கள் இரண்டு குடும்பங்களை இணைத்து, உறவினர்களாக மாற்றி விட்டது' என்கிறார், தீபிகா படுகோனே.