ஹன்சிகாவுக்கு ஓ.கே சொன்ன சிவகார்த்திகேயன்!

இப்போதெல்லாம் ஹீரோக்களை கவர்ந்த ஹீரோயின் கிடைத்து விட்டால், அந்த நடிகர்களின் கால்சீட் வாங்குவது ரொம்ப ரொம்ப எளிதான விசயம். இது நமக்கு தெரிந்திருக்கும்போது சினிமாவை அக்கு வேற ஆணி வேறாக பிரித்து மேய்ந்திருக்கும் குஷ்புவுக்கு தெரியாதா என்ன? அதுவும், நடிகை, தயாரிப்பாளர் என்பதை கடந்து அரசியலையும் ஒரு கை பார்த்துவிட்டார்.

ஆக, தற்போது அனுபவத்தில் ஒரு பழுத்த பழமாகி விட்டார் குஷ்பு. இந்த நிலையில், அரசியல் பயணத்துக்கு தற்காலிக ஓய்வு கொடுத்திருக்கும் குஷ்பு, கணவர் சுந்தர்.சி. இயக்கத்தில் அஜீத்தை வைத்து ஒரு படம் தயாரிக்கும் முயற்சியில் இறங்கினார். ஆனால், அஜீத் அதற்கு பிடி கொடுக்கவிலலை. அதனால் அடுத்த கட்ட முயற்சியாக வளர்ந்து வரும் ஹீரோக்களில் யாரை பிடிக்கலாம் என்று யோசித்து வந்தவரின் மனக்கண்ணில் சிவகார்த்திகேயனின் திருஉருவம் தோன்றியதாம்.


ஆனால், தற்போதைய நிலவரப்படி அவர் கைநிறைய படங்களை வைத்திருப்பவர் ஆயிற்றே. அவரை எப்படி பிடிப்பது என்று தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்த குஷ்பு, அதான் நம்ம சின்ன குஷ்பு ஹன்சிகா இருக்கிறாரே என்று ஐடியா ஒர்க்அவுட்டான சந்தோசத்தில் சொடக் போட்டிருக்கிறார். இதையடுத்து, ஹன்சிகாவை அழைத்து பேசியபோது, சிவாவிடம் பேசி கால்சீட் வாங்கித்தர வேண்டியது என் வேலை என்று சொல்லி ஒரு சாயங்கால வேளையில் அவரை சந்தித்திருக்கிறார்.

ஹன்சிகா தன்னை சந்திக்க வருகிறார் என்றதும் உற்சாகத்தில் நிரம்பி வழிந்து வரவேற்றுள்ளார் சிவகார்த்திகேயன். அப்போது குஷ்பு தயாரிக்கும் படத்தில் நடிக்க வேண்டும் என்று சொன்னபோது இப்போதைககு சாத்தியமில்லையே என்று இழுத்திருக்கிறார். அதையடுத்து, அப்படின்னா அந்த படத்தில் எனக்கு ஜோடியாக நடிக்க வேற ஹீரோ யாரையாவது கேட்டுப் பார்க்கிறேன் என்று ஹன்சிகா சொன்னதும், இதை முதல்லேயே சொல்லியிருக்கக்கூடாதா? என்று தடுமாறிப்போன சிவா, எப்ப படப்பிடிப்புன்னு சொல்லுங்க, திரும்பவும் ஒரு மான்கராத்தே டான்ஸ் போட்டு விடுவோம் என்றாராம்.

ஆக, ஹன்சிகா மூலம் குஷ்புவின் தயாரிப்பில சுந்தர்.சி இயக்கத்தில் சிவகார்த்திகேயன்-ஹன்சிகா மீண்டும் ஜோடி சேரும் ஒரு முயற்சி நடந்தேறியிருக்கிறது.