பிரபல இசைக்கலைஞர் மாண்டலின் ஸ்ரீனிவாசன் காலமானார்

பிரபல மாண்டலின் இசைக்கலைஞரான ஸ்ரீனிவாசன் உடல்நிலை பாதிப்பால் இன்று (செப்டம்பர் 19) அன்று காலமானார். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவரான ஸ்ரீநிவாசன், மான்டலின் இசை குடும்பத்தின் வாரிசாவார். 45 வயதாகும் இவர் கல்லீரல் பாதிப்பு காரணமாக செப்டம்பர் 2ம் தேதி முதல் சென்னையில் உள்ள தனியார்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை 9.30 மணிக்கு அவர் உயிரிழந்தார்.
மான்டலின் இசை உலகில் புகழ்பெற்றவராக திகழ்ந்த இவர் பத்மஸ்ரீ, சங்கீத ரத்னா உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.