காதில் தோடு போடுவதும், பள்ளியில் தோப்புக்கரணம் போடுவதும் எதற்காக?

மனித உடலிலுள்ள உடலுறுப்புக்களுடன் இணைத்துள்ள 21 நரம்புகள் காதின் மடலிலே காணப்படுகிறது. அதில் நமக்கு முக்கியமான ஞாபக சக்தி நரம்பு கீழ் மடலில் வட்டமான தோடு போடும் பகுதியிலிருந்து மூளையுடன் இணைக்கப்படுகிறது. ஞாபக சக்தி கூட்டுவதற்கு அதன் நடுவே துளை போட்டு அதில் தோடு போட்டு அதனை அடிக்கடி துருவி விட வேண்டும்.

பள்ளிப் பருவத்தில் ஆசிரியர்கள் நரம்பை துருகி விடவே காதை முறுக்குவதும், தோப்புக்கரண‌ம் போடவும் சொன்னார்கள் போல. காரணம் அப்படி செய்யும் போது அந்த நேரத்தில் சொல்லும், நினைக்கும் விஷயங்கள் மனதில் அப்படியே பதியும்.
அதனாலேயே குழப்படி செய்தாலோ, வீட்டுப் பாடம் செய்யாது விட்டாலோ ஆசிரியர்கள் மாணவர்களை தோப்புக்கரணம் போடச் சொல்ல மாணவர்கள் தோப்புக்கரணம் போடுவது மிகவும் ஒரு சாதாரண விடயமாகும்.

பரீட்சை நெருங்கி விட்டால் மாணவர்களுக்கு பக்தி அதிகரித்து பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போடுவதும் உண்டு. ஆனால் தற்காலத்தில் இவ்வழக்கம் அருகிப் போய் விட்டது. ஆனால் அமெரிக்காவில் இந்த தோப்புக்கரணத்தை ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்டமை ஆச்சர்யமான விடயாமாகும்.

தோப்புக்கரணம் என்கின்ற எளிய உடற்பயிற்சியால் மூளையின் செல்களும் நியூரான்களும் சக்தி பெறுகின்றன என லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மருத்துவர் எரிக் ராபின்ஸ் (Dr.Eric Robins) கூறுகிறார். அவர் தன்னிடம் வரும் நோயாளி களுக்கு அந்த உடற்பயிற்சியை சிபாரிசு செய்வதாகவும், இவ்வாறு தோப்புக்கரண உடற்பயிற்சியை சில நாட்கள் தொடர்ந்து செய்ததன் மூலம் பரிட்சைகளில் மிகக் குறைந்த புள்ளிகளை எடுக்கும் ஒரு பள்ளி மாணவன் மிக நல்ல புள்ளிகளை வாங்க ஆரம்பித்ததாகவும் கூறுகிறார்.

அத்தோடு காதுகளை பிடித்துக் கொள்வது அக்குபஞ்சர் புள்ளிகளைத் தூண்டி விடுகின்ற ஒரு முக்கிய செயற்பாடாகும் என்கிறார் யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் நிபுணரான டாக்டர் யூஜினியஸ் அங் (Dr. Eugenius ஆங்).அதனால் சக்தி வாய்ந்த மாற்றங்கள் மூளையின் நரம்பு மண்டல வழிகளிலும் ஏற்படுவதாகவும், இடது கையால் வலது கா தையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழுகையில் மூளையின் இரு பகுதிகளும் பலனடையயும் என்றும் அவர் தெரிவிக்கிறார்.
டாக்டர் யூஜினியஸ் அங் EEG கருவியால் தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் மாற்றங்களை அளந்து காண்பித்ததோடு மூளையில் நியூரான்கள் செயல்பாடுகள் அதிகரிப்பதை பரிசோதனையில் காண்பித்த அவர் மூளையின் வலது, இடது பாகங்கள் சமமான சக்திகளை அடைவதாகவும் மிக நுண்ணிய தகவல் அனுப்பும் காரணிகள் வலுப்பெறுவதும் பரிசோத னையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டாக்டர் யூஜினியஸ் அங் தான் தினமும் தோப்புக்கரண உடற்பயிற்சி செய்வதாகவும் கூறுகிறார். Autism, Alzheimer போன்ற இக்காலத்தில் அதிகரித்து வரும் நோய்களுக்குக் கூட இத்தோப்புக்கரண உடற்பயிற்சியை ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைப்பதோடு தோப்புக்கரணம் தினமும் செய்வதன் மூலம் மேற்கண்ட நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மிக நல்ல பலன்களைப் பெறுவதாக அவர் களது பரிசோதனைகள் சொல்கின்றன.
தோப்புக்கரணத் தைப் பற்றியும் அதன் பலன்கள் பற்றியும் ப்ராணிக் சிகிச்சை நிபுணர் கோ சோக் சூயி (Master Koa Chok ஸுஇ) என்பவர் தான் எழுதிய Super Brain Yoga என்ற புத்தகத்தில் குறிப்பிடுவதோடு தன்னுடைய சொற்பொழிவுகளிலும் அதிகம் இதனைப் பற்றிக் கூறியிருக்கிறார்.

இதனாலே தான் நம் முன்னோர்களால் பள்ளிகளில் தோப்புக்கரணம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும், தோப்புக்கரண முறையால் தண்டிக் கப்படுவதன் மூலம் படிக்காத மாணவர்கள் அவர்களது அறிவுத் திறன் அதிகரிக்க வழியும் காண்பிக்கப்பட்டிருக்கலாம் எனவும் தோன்றுகிறது. வியக்கத் தக்க அறிவு சார்ந்த மாற்றங்களைக் காண்பதற்கு தினந்தோறும் மூன்று நிமிடங்கள் இந்த தோப்புக்கரணப் பயிற்சியைச் செய்தால் போதும் என்கிறார்கள் ஆராச்சியாளர்கள்.

உங்கள் கால்களை உங்கள் தோள்களின் அகலத்திற்கு அகட்டி வைத்து நின்று கொள்ளுங்கள். உங்கள் பாதங்கள் நேராக இருக் கட்டும். வலது காதை இடது கையின் பெருவிரலாலும் ஆட் காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள். அதே போல் இடது காதை வலது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள். பிடித்துக் கொள்ளும் போது இடது கை உட்புறமாகவும், வலது கை வெளிப்புறமாகவும் இருக்க வேண் டும் என்பது முக்கியம். மூச்சை நன்றாக வெளியே விட்டபடி அப்படியே உட்கார்ந்து மூச்சை உள்ளே நன்றாக இழுத்தபடி எழுந்து நில்லுங்கள். மூச்சும், உட்கார்ந்து எழுவதும் ஒரு தாளலயத்துடன் இருக்கட்டும்.

செய்து பழக்கமில்லாதவர்களுக்கு ஆரம்பத்திலேயே மூன்று நிமிட ங்கள் தொடர்ந்து தோப்புக்கரணம் செய்வது கடினமாக இருக் கலாம். அப்படிப்பட்டவர்கள் ஒரு நிமிடம் செய்வதில் இருந்து ஆரம்பித்து நாட்கள் செல்லச் செல்ல இரண்டு நிமிட ங்கள், பிறகு மூன்று நிமிடங்கள் என்று அதிகரியுங்கள். ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் மிக நல்ல பலன்களைப் பார்க்கும் போது உங்கள் அறிவுத் திறனின் வளர்ச்சிக்காக மூன்று நிமிடங்கள் தினமும் செலவழிப்பது மிகப்பெரிய விஷயமல்ல அல்லவா?