முந்திரி பாதாம் பருப்பு கேக்.

பாதாம் பருப்பு ¾ கப்பை வெந்நீரில் 10 நிமிடம் ஊறவைத்து தோல்நீக்கி, காயவைத்துக் கொள்ளவும். முந்திரி, பாதாம் பருப்பு இரண்டையும் தனி தனியாக ¾ கப்பில் (மொத்தம் ஒரு கப்) எடுத்து  மிக்ஸியில் மென்மையாகப் பொடித்துக்கொள்ளவும். 3.4/ கப் பாலை அடுப்பில் வைத்து சேர்ந்தாற்போல் திரிதிரியாய் வரும் பதத்திற்குக் காய்ச்சிக்கொள்ளவும். (முற்றிலும் இறுகவேண்டாம்.)
அதே நேரத்தில் இன்னொரு அடுப்பில் வாணலியில் 1 ½  சர்க்கரையுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து, (தேவைப்பட்டால் சர்க்கரை கரைந்ததும் சிறிது பால்சேர்த்து அழுக்கு நீக்கி) ஒற்றைக் கம்பிப் பதத்திற்கு பாகு காய்ச்சவும்.
பாகு வந்தவுடன் பருப்புப் பொடிகளையும், 1 தேக்கரண்டி கடலைமாவையும் சிறிது சிறிதாகத் தூவிக் கிளறிக்கொண்டே இருக்கவும்.எல்லாப் பொடியும் கலந்து, கலவை சேர்ந்தாற்போல் வரும்போது, பால்கோவாவையும் கலந்து கிளறவும்.
ஏலப்பொடி தூவி, ஒரு கப் நெய்யை சிறிது சிறிதாகச் சேர்த்து, தொடர்ந்து கிளறவும்.நெய் பிரிந்து, கலவை ஒட்டாமல் சேர்ந்துவரும்போது நெய்தடவிய தட்டில் கொட்டி, லேசான சூடு இருக்கும்போதே வில்லைகள் போட்டு, ஆறியதும் பரிமாறவும்.