எபோலா' உயிர்கொல்லி வைரஸ் உலகம் முழுவதிலும் உள்ள மக்களிடத்தில்
மிகப் பெரும் பீதியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இதனால் இன்று வரையில் சுமார் 900க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இந்த வைரஸ்
முதலில் 1976ஆம் ஆண்டு பரவ
ஆரம்பித்துள்ளது.
இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துள்ளார்கள். இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியுமே தவிர இதனை அடியோடு அழித்துவிட முடியாது. இது எயிட்ஸை விட பல மடங்கு பேராபத்து தரக்கூடிய வைரஸாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
1976ஆம் ஆண்டு இந்த வைரஸ் சியாராலியோன் மற்றும் சூடான் நாட்டில் பரவிய போது தொற்றுக்குள்ளாகிய அனைவரும் இறந்து போனார்கள்.
இதன் பின்னரே இதனைப் பரவவிடாமல் தடுத்து, ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளார்கள். ஆனால் இத்தனை ஆண்டுகள் கழித்து அது மீண்டும் எவ்வாறு பரவ ஆரம்பித்துள்ளது என்பது ஆய்வுக்குரிய விடயமாக மாறியுள்ளது. ஏனெனில் இந்த வைரஸ் ஒருரை தாக்கினால், அவர் 7 அல்லது 8 நாட்களில் நிச்சயம் உயிரிழந்து விடுவார் என வைத்திய நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துள்ளார்கள். இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியுமே தவிர இதனை அடியோடு அழித்துவிட முடியாது. இது எயிட்ஸை விட பல மடங்கு பேராபத்து தரக்கூடிய வைரஸாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
1976ஆம் ஆண்டு இந்த வைரஸ் சியாராலியோன் மற்றும் சூடான் நாட்டில் பரவிய போது தொற்றுக்குள்ளாகிய அனைவரும் இறந்து போனார்கள்.
இதன் பின்னரே இதனைப் பரவவிடாமல் தடுத்து, ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளார்கள். ஆனால் இத்தனை ஆண்டுகள் கழித்து அது மீண்டும் எவ்வாறு பரவ ஆரம்பித்துள்ளது என்பது ஆய்வுக்குரிய விடயமாக மாறியுள்ளது. ஏனெனில் இந்த வைரஸ் ஒருரை தாக்கினால், அவர் 7 அல்லது 8 நாட்களில் நிச்சயம் உயிரிழந்து விடுவார் என வைத்திய நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
அப்படியென்றால், இந்த வைரஸ் தாக்கிய நபர்கள் அல்லது அனைத்து விலங்குகளும் இறந்திருக்க-வேண்டும் அல்லவா? இப்போது எப்படி மீண்டும்
அந்த வைரஸ் உயிர் பெற்றது என்று மருத்துவர்கள் குழம்பிப் போயிருக்கின்றனர்.
எபோலாவின் பூர்வீகம்
ஆபிரிக்க நாடான கொங்கோவில் உள்ள எபோலா ஆற்றின் கரையோர கிராமம் ஒன்றில், 1976 ஆம் ஆண்டு இந்நோய் கண்டறியப்பட்டுள்ளதால், அந்த ஆற்றின் பெயரையே இந்த வைரஸிற்கும் வைத்துள்ளார்கள். ஆபிரிக்க கண்டமானது மனிதனுக்கு மட்டுமல்ல, மனிதனைக் கொல்லும்
பல வைரஸ்களுக்கும் பிறப்பிடமாக இருந்திருக்கின்றது. இங்குள்ளவர்கள் குரங்குக் கறி,
வௌவால் கறி சாப்பிடுவது இது போன்ற வைரஸ்கள்
மனிதனை தாக்குவதற்கு காரணமாய் இருக்கின்றன என்ற விசித்திர காரணத்தை
சில ஆராய்ச்சியாளர்கள் முன் வைக்கின்றனர். குரங்குகள் இது போன்ற புதுவகை வைரஸ்களால் பாதிக்கப்படுகின்றன. அதே இன வரிசையில் வரும் மனிதனுக்கும் இவை எளிதாகப் பரவுகின்றது. இந்த எபோலா வைரஸ் பரப்புவதில் பழம் தின்னி
வௌவால்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இதில் ஆச்சரியமான விடயம் என்னவென்றால், அந்த வௌவால்களுக்கு இந்த வைரஸினால் பாதிப்பு
எதுவும் உண்டாவதில்லை. அது எப்படி என்பதற்கான காரணங்கள் கண்டறியப்படும்போது இதற்கு
தடுப்பு மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படலாம். ஆனால், இன்று வரை இதற்கு மருத்துவம் எதுவும்
கண்டுபிடிக்கப்படவில்லை. இன்று மீள் உருவெடுத்திருக்கும் எபோலா உயிர்கொல்லி வைரஸானது பறவையிலிருந்து தொற்றியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் தான் இதன் தாக்கம் முதலில் தொடங்கியுள்ளது. இதுவரையில் சுமார் 900 பேர் இக் கொடிய
வைரஸ் நோயினால் பலியாகியுள்ளனர். இது இவ்வாறிருக்க, இந்த வைரஸ் படு வேகமாக பரவி வருகிறது. இன்னும் சில தினங்களில் இது சுமார்
30,000 பேருக்கு பரவ வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள பிரித்தானியா, தமது பாதுகாப்பு சபையைக்
கூட்டி, இந் நோய் பிரித்தானியாவை தாக்கினால் என்ன
செய்வது என்று ஆராய்ந்துள்ளது. உலகில் உள்ள மக்கள் பலர் தமது விடுமுறைக்காகப் பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், இந்த வைரஸ் படுவேகமாகப் பரவும் வாய்ப்புள்ளது. நைஜீரிய நாட்டின்
அனைத்து எல்லைகளையும் அண்டைய நாடுகள் காலவரையறை இன்றி மூடியுள்ளன. ஆனால் அதற்கு முன்னரே இந்த நோய் பல
நாடுகளுக்குப் பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
நோயின் அறிகுறி மற்றும் விளைவு
"எபோலா"
வைரஸ் ஒருவருக்குத் தொற்றி முதல் 21 நாட்களில் திடீர் காய்ச்சல், பலவீனம், தசை நோவு, தலைவலி மற்றும் தொண்டை அடைப்பு என்பன ஏற்படும் எனவும் இந்த அறிகுறிகள் தவறுதலாக மலேரியா அல்லது தைபோய்ட் காய்ச்சல் எனக் கருதப்படும் வாய்ப்பு உள்ளது எனவும்,
மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். எனினும்,
எபோலா வைரஸ் தொற்று
முற்றும் கட்டத்தில் வாந்தி,
வயிற்றுப் போக்கு,
சிறுநீரக மற்றும் ஈரல் செயல் இழப்பு, உள்ளக மற்றும் வெளிப்புற இரத்த கசிவு என்பன ஏற்படும் எனவும் இந்த அறிகுறிகள் ஏற்படும் நபர் உயிர் பிழைப்பது அரிது என்றும் கூறப்படுகிறது. இதேவேளை, ஆரம்ப கட்ட அறிகுறிகள் தெரியும் பட்சத்தில் பல்வேறுபட்ட 5 மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பின்னரே எபோலா தாக்கியிருப்பதாக உறுதியாகக் கூறமுடியும் என மருத்துவர்கள் தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த நோயின் தாக்கத்துக்குள்ளானவர்கள் மிகவும் பரிதாபகரமான முறையில் இறக்கின்றார்கள். இந்த வைரஸ் நரம்பு மண்டலத்தை தாக்குகிறது. முக்கிய நரம்புகளை தாக்கி, வெளிப்புற தோலில் கோரைகளை (துவாரங்களை) உண்டாக்குகிறது. தோல் பழுதடைந்து தசைகள் தொங்கிப்போய்,
வயதானவர்கள் போல தாம் உருமாறிய
பின்னரே உயிரிழப்பர் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
செய்யக்கூடாதவை
1. எபோலாவால் பாதிக்கப்பட்டவர்களையும், எபோலாவால் இறந்தவர்களையும் தொடுதல் கூடாது.
2. எபோலா நோயால்
பாதிக்கப்பட்டவர்களின் உடைகள், படுக்கைகளைக்கூட தொடக்கூடாது.
3. எபோலா நோயால்
பாதிக்கப்பட்டவர்களின் எச்சில், குடித்து வைத்த தண்ணீர், உணவு என்று எதையும் தொடக்கூடாது. அவர்களது இரத்தம், சிறுநீர், மலம் என்று எதுவும் நம் உடல் மீது பட்டுவிடக்கூடாது.
4. வௌவால்கள் கடித்த
பழங்கள் எதையும் சாப்பிடக்கூடாது.
5. குரங்குகளுடன் விளையாடுவது, தொடுவது கூடாது. குரங்கு மாமிசம் கூடாது.
6. எபோலா நோயினால்
இறந்தவர்களின் சடலத்தை புதைக்காது எரித்தல் வேண்டும்.
ஆகையினால்
மிகவும் அவதானமாக இந் நோய் தொற்றுக்குள்ளானவர்களோடு பழக வேண்டும். இயன்றளவில் அவர்களை தனிமையில் வைத்து சிகிச்சை வழங்கப்படுதல் வேண்டும். இதன் மூலம் இந் நோய்
தொற்றிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
நோய் பரவலும் பலியானவர்களின் எண்ணிக்கையும்
மேற்கு ஆபிரிக்க நாடுகளில் ‘எபோலா (Ebola) வைரஸ்’ வேகமாக பரவி வருகிறது. மேற்கு ஆபிரிக்காவில் எபோலா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளாக குயினேயா, சியாராலியோன் மற்றும் லைபீரியா ஆகிய நாடுகள் விளங்குகின்றன. லைபீரியாவில் அந்நாட்டு அதிபர்
எல்லென் ஜோன்சன் சிர்லீஃப் அங்குள்ள அனைத்துப்
பாடசாலைகளையும் மூடும்படி உத்தரவிட்டுள்ளார். இந்த வைரஸ் பாதிப்பிற்கு மேற்கு
ஆபிரிக்க நாடுகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆளாகியிருக்கக்கூடும் என்று நிபுணர்கள் கருத்து
வெளியிட்டுள்ளனர்.
எபோலோ தொற்று
நோய்க்கு சரியான சிகிச்சை இல்லாததால், பன்றிக் காய்ச்சலைப் போல இது உலகையே அச்சுறுத்தத் தொடங்கியுள்ளது. இந்தக் கொடிய நோய் தாக்கியதில் இதுவரை சுமார் 900 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நோய் மற்ற
நாடுகளுக்கும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளதால் நோய்த்
தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு சர்வதேச நாடுகளை உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. விமான நிலையங்-களில் வந்திறங்கும் பயணிகளுக்கு இந்நோய் இருக்கிறதா என்று பரிசோதனை செய்ய சிறப்பு சுகாதார குழுக்கள்
அமைக்கப்பட்டுள்ளன.
நோயின் தன்மை அதிகரிக்கும் பொழுது தொடக்கத்தில், காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு என
ஆரம்-பித்து பின் மூக்கு, வாய், காது என உடலுறுப்புகளில் இருந்து இரத்தம் கசிய ஆரம்பிக்கும்.
இந்த வைரஸ்
பாதிப்பு கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு தீவிரமுடன் மனிதர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தி வருவதுடன் அதனை தடுக்கும் காரணிகளை கண்டறிவதிலும் தீர்வு காணப்படாமல் மருத்துவ உலகிற்கு ஒரு சவாலாக இருக்கிறது.
கடந்த 2014ஆம் ஆண்டில், கினியா, லைபீரியா மற்றும் சியாராலியோன் ஆகிய நாடுகளில் 1,201 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்¬களில் 672 பேர் பலியாகியுள்ளனர். கென்யா நாட்டில் 319 பேரும், அதனை தொடர்ந்து சியாராலியோனில் 224 பேரும் மற்றும் லைபீரியா நாட்டில் 129 பேரும் என மொத்தம் 672 பேர் வைரஸ் பாதிப்பில் பலியானார்கள் என்று ஐ.நா. உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இன்றைய நிலைவரப்படி உலக சுகாதாரத் தாபனமான WHO இன் தகவல்படி மேற்கு ஆபிரிக்க நாடுகளான கினியா, சியாராலியோன், லைபீரியா மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளில் மட்டும் 887 பேர் இத் தொற்று நோயால் பீடிக்கப்பட்டும் இதில் 485 பேர் பலியாகியுள்ளனர் எனவும் தெரிய வந்¬துள்¬ளது. மேலும் உலக அளவில் சுமார் 1323 பேர் எபோலா நோய்த் தொற்றுக்கு ஆளாகியும் 729 பேர் பலியாகி இருக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.