ஜனனியின் பொய்.

வனித்தா ஆன்ட்டி ஒருமுறை செக்கச்செவேல் என்று பழுத்திருந்த ஸ்டோபரி பழங்களை வாங்கினாள். ஆன்ட்டிக்கு வினய், கார்த்திக், ஜனனி என்று மூன்று குழந்தைகள் உள்ளனர். குழந்தைகள் சாப்பிட்ட பிறகு பழங்களைத் தரலாம் என்று ஆன்ட்டி நினைத்தாள்.

பழங்கள் மேஜைமீது ஒரு தட்டில் இருந்தன. ஜனனி இதுவரை ஸ்டோபரி பழத்தைச் சாப்பிட்டதேயில்லை. ஆசையோடு அவற்றை வாசனை பார்த்தாள்.
அந்த வாசனை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. பழத்தைத் சாப்பிட்டு பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை அவளுக்கு உண்டாயிற்று.அறையில் யாருமில்லாதபோது ஒரு பழத்தை எடுத்துத் சாப்பிட்டு விட்டாள்.. எல்லோரும் சாப்பிட்ட பின்பு வனித்தா ஆன்ட்டி பழங்களை எண்ணிப் பார்த்தாள். ஒன்று குறைந்தது.

"மைடியர் சில்ட்ரன். ஒரு ஸ்டோபரி பழம் குறைகிறது. யாராவது சாப்பிட்டீர்களா?" என்று குழந்தைகளைப் பார்த்துக் கேட்டாள்.
"நான் இல்லை", "நான் இல்லை" என்று எல்லோரும் சொன்னார்கள். ஜனனியும் அவர்களோடு சேர்ந்து "நான் சாப்பிடவில்லை" என்று சொன்னாள்.
"ஓகே........யார் சாப்பிட்டிருந்தாலும் பரவாயில்லை. ஆனால், ஸ்டோபரி  பழத்தில் அடியில் இலை இருக்கும் . சாப்பிடத் தெரியாமல் அந்த இலையும்  சேர்த்து சாப்பிட்டால் வயிற்றில் பெரியதாக ஸ்டோபரி மரம் முளைத்துவிடும். அதுதான் எனக்குப் பயமாக இருக்கிறது" என்றாள் வனித்தா ஆன்ட்டி.

ஜனனி பயந்துபோய், "இல்லை, நான் இலையை ஜன்னலுக்கு வெளியே எறிந்துவிட்டேன்" என்று கூறி அழத் தொடங்கினாள்.
"பொய் சொன்னால் எப்படியும் மாட்டிக் கொள்கிறோம் பார்த்தாயா? இனிமேல் பொய் சொல்லக்கூடாது....என்ன?" என்று ஜனனியை  சமாதானப்படுத்தினாள் வனித்தா ஆன்ட்டி.