கோடை வெயிலின் தாக்குதல் பெண்களின் அழகுக்கு அச்சுறுத்தலாகிக் கொண்டிருக்கிறது. வெயிலில் அதிக நேரம் நடப்பதால் அவர்களது அழகான சருமம் கறுத்து, சுருங்கி, பொலிவை இழக்கிறது. கவர்ச்சிமிக்க கண்கள் உஷ்ணத்தால் வதங்கிப்போய் பொலிவின்றி காணப்படுகிறது. மே, ஜூன் மாதங்களில் வெப்பம் இன்னும் அதிகரித்து அழகுப் பாதிப்பு அதிகரிக்கும் என்ற எண்ணம், அழகுப் பெண்கள் அனைவரையுமே வாட்டிக் கொண்டிருக்கிறது.
“நமது சருமத்திற்கு தண்ணீர் சத்தும் கொழுப்பும் அத்தியவசியமானது. கோடை காலத்தில் அதிக வியர்வை வெளியேறுவதால், உடலில் தண்ணீர் சத்துக்கு பற்றாக்குறை ஏற்படும்.
அதிக அளவு தண்ணீர் மற்றும் திரவ உணவுகளை பருகி, உள்தேவையை சரிகட்ட வேண்டும். `மாயிசரைசரை’ சருமத்தில் பூசி வெளித் தேவையை சமன் செய்யவேண்டும். உள்ளும், புறமும் இப்படி தண்ணீர் சத்து குறை யாமல் பார்த்துக்கொண்டால், கோடை யில் சரும அழகு அதிகம் பாதிக் காது.
கோடையில் புறஊதா கதிர்கள் தான் அதிக பிரச்சினைக்குரியது,. அவை உடலில்படும்போது சருமம் கறுக்கும். தொடர்ச்சியாக வெயில்பட்டால் அந்த பாதிப்பு அதிகமாகும். புற ஊதா கதிர்கள் சருமத்தை பாதிக்காமல் இருக்க, `சன் ஸ்கிரீன் லோஷன்’ பாதுகாப்பு தருகிறது. இந்த கிரீமை வாங்கி உடலில் வெயில் எங்கெல்லாம் படுகிறதோ அங்கெல்லாம் பூசிக்கொள்ள வேண்டும். இந்த லோஷன் புட்டிகளில் `எஸ்.பி.எப்’ என்ற அளவு (10 முதல் 60 வரை) குறிப்பிடப்பட்டிருக்கும்.
நீங்கள் பத்து என்று குறிப்பிடப்பட்டிருக்கும் கிரீமை வாங்குகிறீர்கள் என்றால் அது (10 * 5) 50 நிமிடங்கள் உங்கள் சருமத்தை வெயிலில் இருந்து பாதுகாக்கும். ஒரு மணி நேரம் நீங்கள் வெயில்படும் அளவிற்கு வெளியே செல்வதாக இருந்தால், இந்த 10 எண் கொண்ட எஸ்.பி.எப். லோஷன் வாங்கி, வெயில்படும் இடங்களில் பூசிக்கொள்ளுங்கள்.
நீங்கள் கோடை காலத்தின் பகல் பொழுதில் பஸ்சில் தொடர்ச்சியாக அதிக நேரம் பயணம் செய்ய வேண்டியிருந்தாலோ, மலை வாசஸ்தலங்களில் பகலில் அதிக நேரம் சுற்ற வேண்டியதிருந்தாலோ 30 முதல் 40 என்ற எண் கொண்டவைகளை பயன்படுத்துங்கள். பெண்களின் முகம், கைகள், கழுத்தின் மேல் பகுதி- கீழ் பகுதி போன்றவைகளை வெயில் நேரடியாக தாக்கும். அந்தப் பகுதிகளில் இதனை பூச வேண்டும். பூசிக்கொண்டு வெளியே சென்றுவிட்டு, நீங்கள் திரும்பி வந்த பின்பு அதை கழுவி சுத்தப்படுத்தவும் செய்யலாம். கழுவாமல் அப்படியே விட்டுவிடவும் செய்யலாம். ஆனால் காலையில் பூசிக் கொண்டு வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பி- மீண்டும் பிற்பகல் வெயிலில் வெளியே செல்லவேண்டிய நிலை ஏற்பட்டால் முதலில் பூசியதை தண்ணீரால் கழுவி அப்புறப்படுத்திவிட்டு, மீண்டும் தேவைப்படும் நேரத்திற்கு தக்கபடி கிரீமை பூசிக்கொள்ள வேண்டும்.
கோடையில் நிறைய பேர் நீச்சல் பயிற்சிக்கு செல்கிறார்கள். குளோரின் கலந்துள்ள அந்த தண்ணீரும், சூரிய கதிர்களும் உடலில்படும்போது சருமம் கறுத்துப்போகும் தன்மை அதிகரிக் கும். அவர்கள் நீச்சலுக்காக இருக்கும் `சன் ஸ்கிரீன் லோஷனை’ வாங்கி பயன்படுத்திக்கொண்டு பயிற்சியை முடித்த பின்பு சுத்தமான தண்ணீரால் தலை முதல் பாதம் வரை குளித்துவிட்டு, அதற்கென்று இருக்கும் லோஷனை வாங்கி பயன்படுத்த வேண்டும். கறுத்துப்போவதை இதன் மூலம் தடுக்கலாம்.
நமது சருமத்தின் கீழே உடலை பாதுகாக்க கொலோஜின் என்ற புரதம் உள்ளது. வெயில்படும்போது இந்த புரதம் சுருங் கும். கண்களுக்கு அடியில் உள்ள சருமத்திலும் கொலோஜின் உள்ளது. வெயில் கண்களில் படுவதாலும், வெயிலில் நாம் கண்களை சுருக்கி, விரித்து பார்ப்பதாலும் கண் பகுதி கொலோஜின் விரைவாக சுருங்கும். அதனை சரிசெய்வதற்காக, கோலோஜின் கலந்த கிரீமை வாங்கி கண்களின் கீழ் பகுதி, வாய்ப்பகுதி போன்றவைகளில் பூசிக்கொள்ளலாம்.
கை, முகம், கண் போன்ற பகுதிகளில் ஏற்கனவே வெயில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், வைட்டமின்-ஈ ஆயிலை வாங்கி, அந்த இடங்களில் பூசுங்கள். 30 நிமிடங்களில் கழுவி விடுங்கள். கழுவாமல் அப்படியே விட்டுவிடவும் செய்யலாம்.
முகத்தில் ஏற்படும் பருக்கள் கோடை காலத்தில் அதிகரிக்கும். பருவே ஏற்படாமல் எப்படி தடுக்கவேண்டும் என்று சொல்கிறேன்.
ஒரு லிட்டர் தண்ணீரை சூடாக்குங்கள். சூடானதும் அடுப்பில் இருந்து இறக்கிவைத்து விட்டு அதில் ஒரு கைப்பிடி துளசியை போட்டு மூடிவைத்துவிடுங்கள். நன்றாக ஆறிய பின்பு அந்த நீரை வடிகட்டி முகம் கழுவ பயன்படுத்துங்கள். தண்ணீரை சூடாக்கி அதில் புதினா, துளசி, வேப்பிலை மூன்றையும் தலா ஒரு கைப்பிடி வீதம் போட்டு ஆறவைத்து வடிகட்டி முகம் கழுவினாலும் முகப்பரு வராது. இதை பிரிஜ்ஜில் வைத்து 3 நாட்கள் வரை பயன்படுத்தலாம். அந்த நீரில் 4 தேக்கரண்டி எடுத்து, அதில் 3 தேக்கரண்டி முல்தாணி மிட்டி கலந்து பரு இருக்கும் இடங்களில் பூசவேண்டும். பத்து நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவிவிட்டால் பரு மறையும்.
சந்தனமும் சரும அழகை மேம்படுத்தும். ஒரு லிட்டர் தண்ணீரை சூடாக்கி, அதில் பிங்க் கலர் ரோஜா இதழ்களை ஒரு கைப்பிடி அளவு போட்டு மூடிவைத்துவிடுங்கள். ஒரு மணி நேரம் கழித்து வடிகட்டி எடுத்து, அந்த நீரை பயன்படுத்தி சந்தன கட்டையை கல்லில் தேய்த்து உரசி, அரைக்கவேண்டும். அதை கறுமையும், வியர்க்குருவும் இருக்கும் இடங்களில் பூச வேண்டும். அரை மணி நேரத்தில் குளிர்ந்த நீரால் கழுவவேண்டும்.
இளநீரையும், தர்பூசணி சாறையும் சம அளவு எடுத்து கலந்து முகத்தில் தேயுங்கள். பத்து நிமிடங்கள் கழித்து மீண்டும் ஒருமுறை பூசுங்கள். படுத்துக்கொண்டு பஞ்சில் முக்கி இதை தேய்ப்பது நல்லது. இல்லாவிட்டால் வழிந்தோடி விடும். பஞ்சில் முக்கிய சாறை கண்களை மூடிக்கொண்டு, கண்களின் மேல் பகுதியிலும் வைக்கவேண்டும். கட்டி வராது. கண்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். முகமும் பொலிவு பெறும்.
சருமத்தில் ஏற்படும் கறுமையை போக்க `டீ`யும் பயன்படுகிறது. தேனீர் தயாரித்த பின்பு மீதம் இருக்கும் டிக்காஷனில் சிறிதளவு கடலைமாவு கலந்து பேஸ்ட் மாதிரி தயாரியுங்கள். அதனை பிரஷ்ஷால் கை, முகம், கழுத்து போன்ற பகுதி களில் பூசி 15 நிமிடம் வைத்திருங்கள். உலர்ந்து இறுக்கமான பின்பு கழுவிவிடுங்கள். பயன்படுத்திய `டீ பேக்கை’ கழுவி கண்களின் மேல் 10 நிமிடங்கள் வைத்திருந்தால், உஷ்ணத்தால் ஏற்படும் கண் சோர்வு நீங்கும்.
வெள்ளரியில் சருமத்திற்கு பலத்தையும், பளபளப்பையும் தரும் வைட்டமின், சிலிக்கான் சத்துக்கள் இருக்கின்றன. அதனை வெட்டி, கண்களில் வைப்பதால் பெருமளவு பலன் கிடைப்பதில்லை. வெள்ளரிக்காயை துருவி, அரைத்து பூசிக்கொண்டால் அதிக பலன் கிடைக்கும்.
நுங்கையும் அழகுக்கு உபயோகிக்கலாம். நுங்கை மிக்சியில் அரைத்து அதில் பச்சை பயறு மாவு, அரிசி மாவு கலந்து பேஸ்ட் ஆக்கி உடலில் பூசி `ஸ்கிரப்’ போல் பயன்படுத்த வேண்டும். இதனை குளிக்க செல்வதற்கு பத்து நிமிடங்களுக்கு முன்னால் பூசி, சோப்பு போடாமல் குளிக்கவேண்டும். இது சருமத்திற்கு அதிக பளபளப்பை தரும். கோடை உஷ்ண பாதிப்பையும் போக்கும்.
கஸ்தூரி மஞ்சள் கிழங்கு ஒன்றை வாங்கி, அதனை நான்கு துண்டுகளாக வெட்டி, 20 லிட்டர் தண்ணீரில், குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு போட்டு வையுங்கள். கிட்டத்தட்ட 30 கிராம் அளவுக்கு அந்த மஞ்சள் இருக்கவேண்டும். அதோடு அரை கப் காய்ச்சாத பாலை கொட்டுங்கள். தண்ணீர் மஞ்சள் நிறம் கலந்ததாக மாறிய பின்பு அதில் மாலை நேர குளியல் போட்டால் உடம்பில் உற்சாகம் பொங்கும். தோல் வியாதிகளும் வராது. இந்த குளியலின்போது தலையில் தண்ணீர் படக்கூடாது.
கோடையில் உடலை உஷ்ணம் அதிகம் தாக்கும். அதனால் உடல் சீதோஷ்ண சமன்பாடு சீரற்று இருமல், எரிச்சல், அரிப்பு போன்ற அவஸ்தைகள் ஏற்படும். உஷ்ணத்தை குறைக்க உச்சி முதல் பாதம் வரை உடல் முழுக்க நல்லெண்ணெய் தேய்க்கவேண்டும். அரை மணி முதல் ஒரு மணி நேரம் ஊறவேண்டும். பின்பு தலைக்கு சீயக்காய் பயன்படுத்தி குளிக்க வேண்டும். உடலுக்கு பச்சை பயறு மாவு பூசி, எண்ணெய் பிசுக்கை போக்கவேண்டும். வாரத்தில் இரண்டு நாட்கள் இவ்வாறு எண்ணெய் குளியல் செய்தால், உச்சி குளிரும். வெப்பம் விலகும்.”
“நமது சருமத்திற்கு தண்ணீர் சத்தும் கொழுப்பும் அத்தியவசியமானது. கோடை காலத்தில் அதிக வியர்வை வெளியேறுவதால், உடலில் தண்ணீர் சத்துக்கு பற்றாக்குறை ஏற்படும்.
அதிக அளவு தண்ணீர் மற்றும் திரவ உணவுகளை பருகி, உள்தேவையை சரிகட்ட வேண்டும். `மாயிசரைசரை’ சருமத்தில் பூசி வெளித் தேவையை சமன் செய்யவேண்டும். உள்ளும், புறமும் இப்படி தண்ணீர் சத்து குறை யாமல் பார்த்துக்கொண்டால், கோடை யில் சரும அழகு அதிகம் பாதிக் காது.
கோடையில் புறஊதா கதிர்கள் தான் அதிக பிரச்சினைக்குரியது,. அவை உடலில்படும்போது சருமம் கறுக்கும். தொடர்ச்சியாக வெயில்பட்டால் அந்த பாதிப்பு அதிகமாகும். புற ஊதா கதிர்கள் சருமத்தை பாதிக்காமல் இருக்க, `சன் ஸ்கிரீன் லோஷன்’ பாதுகாப்பு தருகிறது. இந்த கிரீமை வாங்கி உடலில் வெயில் எங்கெல்லாம் படுகிறதோ அங்கெல்லாம் பூசிக்கொள்ள வேண்டும். இந்த லோஷன் புட்டிகளில் `எஸ்.பி.எப்’ என்ற அளவு (10 முதல் 60 வரை) குறிப்பிடப்பட்டிருக்கும்.
நீங்கள் பத்து என்று குறிப்பிடப்பட்டிருக்கும் கிரீமை வாங்குகிறீர்கள் என்றால் அது (10 * 5) 50 நிமிடங்கள் உங்கள் சருமத்தை வெயிலில் இருந்து பாதுகாக்கும். ஒரு மணி நேரம் நீங்கள் வெயில்படும் அளவிற்கு வெளியே செல்வதாக இருந்தால், இந்த 10 எண் கொண்ட எஸ்.பி.எப். லோஷன் வாங்கி, வெயில்படும் இடங்களில் பூசிக்கொள்ளுங்கள்.
நீங்கள் கோடை காலத்தின் பகல் பொழுதில் பஸ்சில் தொடர்ச்சியாக அதிக நேரம் பயணம் செய்ய வேண்டியிருந்தாலோ, மலை வாசஸ்தலங்களில் பகலில் அதிக நேரம் சுற்ற வேண்டியதிருந்தாலோ 30 முதல் 40 என்ற எண் கொண்டவைகளை பயன்படுத்துங்கள். பெண்களின் முகம், கைகள், கழுத்தின் மேல் பகுதி- கீழ் பகுதி போன்றவைகளை வெயில் நேரடியாக தாக்கும். அந்தப் பகுதிகளில் இதனை பூச வேண்டும். பூசிக்கொண்டு வெளியே சென்றுவிட்டு, நீங்கள் திரும்பி வந்த பின்பு அதை கழுவி சுத்தப்படுத்தவும் செய்யலாம். கழுவாமல் அப்படியே விட்டுவிடவும் செய்யலாம். ஆனால் காலையில் பூசிக் கொண்டு வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பி- மீண்டும் பிற்பகல் வெயிலில் வெளியே செல்லவேண்டிய நிலை ஏற்பட்டால் முதலில் பூசியதை தண்ணீரால் கழுவி அப்புறப்படுத்திவிட்டு, மீண்டும் தேவைப்படும் நேரத்திற்கு தக்கபடி கிரீமை பூசிக்கொள்ள வேண்டும்.
கோடையில் நிறைய பேர் நீச்சல் பயிற்சிக்கு செல்கிறார்கள். குளோரின் கலந்துள்ள அந்த தண்ணீரும், சூரிய கதிர்களும் உடலில்படும்போது சருமம் கறுத்துப்போகும் தன்மை அதிகரிக் கும். அவர்கள் நீச்சலுக்காக இருக்கும் `சன் ஸ்கிரீன் லோஷனை’ வாங்கி பயன்படுத்திக்கொண்டு பயிற்சியை முடித்த பின்பு சுத்தமான தண்ணீரால் தலை முதல் பாதம் வரை குளித்துவிட்டு, அதற்கென்று இருக்கும் லோஷனை வாங்கி பயன்படுத்த வேண்டும். கறுத்துப்போவதை இதன் மூலம் தடுக்கலாம்.
நமது சருமத்தின் கீழே உடலை பாதுகாக்க கொலோஜின் என்ற புரதம் உள்ளது. வெயில்படும்போது இந்த புரதம் சுருங் கும். கண்களுக்கு அடியில் உள்ள சருமத்திலும் கொலோஜின் உள்ளது. வெயில் கண்களில் படுவதாலும், வெயிலில் நாம் கண்களை சுருக்கி, விரித்து பார்ப்பதாலும் கண் பகுதி கொலோஜின் விரைவாக சுருங்கும். அதனை சரிசெய்வதற்காக, கோலோஜின் கலந்த கிரீமை வாங்கி கண்களின் கீழ் பகுதி, வாய்ப்பகுதி போன்றவைகளில் பூசிக்கொள்ளலாம்.
கை, முகம், கண் போன்ற பகுதிகளில் ஏற்கனவே வெயில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், வைட்டமின்-ஈ ஆயிலை வாங்கி, அந்த இடங்களில் பூசுங்கள். 30 நிமிடங்களில் கழுவி விடுங்கள். கழுவாமல் அப்படியே விட்டுவிடவும் செய்யலாம்.
முகத்தில் ஏற்படும் பருக்கள் கோடை காலத்தில் அதிகரிக்கும். பருவே ஏற்படாமல் எப்படி தடுக்கவேண்டும் என்று சொல்கிறேன்.
ஒரு லிட்டர் தண்ணீரை சூடாக்குங்கள். சூடானதும் அடுப்பில் இருந்து இறக்கிவைத்து விட்டு அதில் ஒரு கைப்பிடி துளசியை போட்டு மூடிவைத்துவிடுங்கள். நன்றாக ஆறிய பின்பு அந்த நீரை வடிகட்டி முகம் கழுவ பயன்படுத்துங்கள். தண்ணீரை சூடாக்கி அதில் புதினா, துளசி, வேப்பிலை மூன்றையும் தலா ஒரு கைப்பிடி வீதம் போட்டு ஆறவைத்து வடிகட்டி முகம் கழுவினாலும் முகப்பரு வராது. இதை பிரிஜ்ஜில் வைத்து 3 நாட்கள் வரை பயன்படுத்தலாம். அந்த நீரில் 4 தேக்கரண்டி எடுத்து, அதில் 3 தேக்கரண்டி முல்தாணி மிட்டி கலந்து பரு இருக்கும் இடங்களில் பூசவேண்டும். பத்து நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவிவிட்டால் பரு மறையும்.
சந்தனமும் சரும அழகை மேம்படுத்தும். ஒரு லிட்டர் தண்ணீரை சூடாக்கி, அதில் பிங்க் கலர் ரோஜா இதழ்களை ஒரு கைப்பிடி அளவு போட்டு மூடிவைத்துவிடுங்கள். ஒரு மணி நேரம் கழித்து வடிகட்டி எடுத்து, அந்த நீரை பயன்படுத்தி சந்தன கட்டையை கல்லில் தேய்த்து உரசி, அரைக்கவேண்டும். அதை கறுமையும், வியர்க்குருவும் இருக்கும் இடங்களில் பூச வேண்டும். அரை மணி நேரத்தில் குளிர்ந்த நீரால் கழுவவேண்டும்.
இளநீரையும், தர்பூசணி சாறையும் சம அளவு எடுத்து கலந்து முகத்தில் தேயுங்கள். பத்து நிமிடங்கள் கழித்து மீண்டும் ஒருமுறை பூசுங்கள். படுத்துக்கொண்டு பஞ்சில் முக்கி இதை தேய்ப்பது நல்லது. இல்லாவிட்டால் வழிந்தோடி விடும். பஞ்சில் முக்கிய சாறை கண்களை மூடிக்கொண்டு, கண்களின் மேல் பகுதியிலும் வைக்கவேண்டும். கட்டி வராது. கண்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். முகமும் பொலிவு பெறும்.
சருமத்தில் ஏற்படும் கறுமையை போக்க `டீ`யும் பயன்படுகிறது. தேனீர் தயாரித்த பின்பு மீதம் இருக்கும் டிக்காஷனில் சிறிதளவு கடலைமாவு கலந்து பேஸ்ட் மாதிரி தயாரியுங்கள். அதனை பிரஷ்ஷால் கை, முகம், கழுத்து போன்ற பகுதி களில் பூசி 15 நிமிடம் வைத்திருங்கள். உலர்ந்து இறுக்கமான பின்பு கழுவிவிடுங்கள். பயன்படுத்திய `டீ பேக்கை’ கழுவி கண்களின் மேல் 10 நிமிடங்கள் வைத்திருந்தால், உஷ்ணத்தால் ஏற்படும் கண் சோர்வு நீங்கும்.
வெள்ளரியில் சருமத்திற்கு பலத்தையும், பளபளப்பையும் தரும் வைட்டமின், சிலிக்கான் சத்துக்கள் இருக்கின்றன. அதனை வெட்டி, கண்களில் வைப்பதால் பெருமளவு பலன் கிடைப்பதில்லை. வெள்ளரிக்காயை துருவி, அரைத்து பூசிக்கொண்டால் அதிக பலன் கிடைக்கும்.
நுங்கையும் அழகுக்கு உபயோகிக்கலாம். நுங்கை மிக்சியில் அரைத்து அதில் பச்சை பயறு மாவு, அரிசி மாவு கலந்து பேஸ்ட் ஆக்கி உடலில் பூசி `ஸ்கிரப்’ போல் பயன்படுத்த வேண்டும். இதனை குளிக்க செல்வதற்கு பத்து நிமிடங்களுக்கு முன்னால் பூசி, சோப்பு போடாமல் குளிக்கவேண்டும். இது சருமத்திற்கு அதிக பளபளப்பை தரும். கோடை உஷ்ண பாதிப்பையும் போக்கும்.
கஸ்தூரி மஞ்சள் கிழங்கு ஒன்றை வாங்கி, அதனை நான்கு துண்டுகளாக வெட்டி, 20 லிட்டர் தண்ணீரில், குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு போட்டு வையுங்கள். கிட்டத்தட்ட 30 கிராம் அளவுக்கு அந்த மஞ்சள் இருக்கவேண்டும். அதோடு அரை கப் காய்ச்சாத பாலை கொட்டுங்கள். தண்ணீர் மஞ்சள் நிறம் கலந்ததாக மாறிய பின்பு அதில் மாலை நேர குளியல் போட்டால் உடம்பில் உற்சாகம் பொங்கும். தோல் வியாதிகளும் வராது. இந்த குளியலின்போது தலையில் தண்ணீர் படக்கூடாது.
கோடையில் உடலை உஷ்ணம் அதிகம் தாக்கும். அதனால் உடல் சீதோஷ்ண சமன்பாடு சீரற்று இருமல், எரிச்சல், அரிப்பு போன்ற அவஸ்தைகள் ஏற்படும். உஷ்ணத்தை குறைக்க உச்சி முதல் பாதம் வரை உடல் முழுக்க நல்லெண்ணெய் தேய்க்கவேண்டும். அரை மணி முதல் ஒரு மணி நேரம் ஊறவேண்டும். பின்பு தலைக்கு சீயக்காய் பயன்படுத்தி குளிக்க வேண்டும். உடலுக்கு பச்சை பயறு மாவு பூசி, எண்ணெய் பிசுக்கை போக்கவேண்டும். வாரத்தில் இரண்டு நாட்கள் இவ்வாறு எண்ணெய் குளியல் செய்தால், உச்சி குளிரும். வெப்பம் விலகும்.”