ராணாவை த்ரிஷா ஓரங்கட்டுவது ஏன்?

தமிழில் ஜெயம்ரவியுடன் பூலோகம் படத்தில் ஏற்கனவே நடித்து முடித்து விட்டவர், இப்போது சுராஜ் இயக்கத்தில் ஜெயம்ரவி நடிக்கும் அப்பாடக்கர் படத்திலும் ஜோடி சேர்ந்திருக்கிறார் த்ரிஷா. அதோடு, அஜீத்தின் 55வது படத்திலும் நடித்து வருபவர், மேலுமொரு படத்திலும் புக்காகியிருக்கிறார். ஆக த்ரிஷாவின் தமிழ் சினிமா மார்க்கெட் தற்போது பிசியாகவே உள்ளது.
இந்த நிலையில், கன்னடத்தில் ஒரு படத்தில் குத்துப்பாட்டுக்கு நடனமாடும் த்ரிஷா,

ஏற்கனவே தெலுங்கில் வெளியான தூக்குடு படத்தின் கன்னட ரீமேக்கான பவர் படத்தில் நடித்தவர், தெலுங்கில் வெளியான அத்திரின்டிக்கி தாரெடி என்ற படத்தின் கன்னட ரீமேக்கிலும் நடிக்க தற்போது ஒப்பந்தமாகியிருக்கிறார். ஆக, தெலுங்கு படங்களின் கன்னட ரீமேக் என்றாலே த்ரிஷாவுக்கே செல்லும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
இதன்காரணமாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை தெலுங்கு நடிகர் ராணாவுடன் வெளிநாடுகளுக்கு ஜாலி டூர் அடித்து வந்த த்ரிஷா. ராணாவுடன் தான் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்களோ, செய்திகளோ வெளியானால் மற்ற ஹீரோக்களுக்கு தன் மீது ஈர்ப்பு ஏற்படாது. அதனால் புதிய படவாய்ப்புகள் வருவது கடினம் என்பதால்தான், சமீபத்தில் அவரை தான் விலகி விட்டது போன்று மீடியாக்களில் செய்தி கசிய வைத்தாராம். இப்போது அவர் சம்பந்தப்பட்ட எந்த தெலுங்குப்பட விழாக்களில் தன்னை கலந்து கொள்ள அழைத்தாலும் இந்த காரணத்தையே சொல்லி எஸ்கேப்பாகி வருகிறாராம் த்ரிஷா. ஆனால் அவர்களுக்கிடையிலான நெருக்கம் எப்போதும போல் இப்போதும் தொடர்ந்துதான் வருகிறதாம்.