பிள்ளைகள் பால்
வேற்றுமையின்றி நட்புடன் பழகுவதை, நட்பு என்ற கண்
கொண்டு பார்க்காமல் `எங்கே பிள்ளைகள்
தவறி விடுவார்களோ..! என்று அச்சப்பட்டு அச்சப்பட்டே பெற்றோர்களும் தமக்குத்தாமே
மன உளைச்சலை ஏற்படுத்திக்கொண்டு வாழ்கிறார்கள்.இது ரொம்பவும் தப்பாகும்.
நான்கு
சுவர்களுக்குள் வளர்க்கப்படும் பிள்ளைகள் காதல் வலையில் விழவில்லையா? தவறுகள் அங்கு நடக்கவில்லையா? என்பதைப் பெற்றோர் நன்றாகச் சிந்தித்துப்
பார்க்கவேண்டும்.
வீட்டுக்குள் வளர்க்கப்படும் பெண் பிள்ளைகள், வெளி உலகத்தை நன்கு தெரியாமல் வளர்கின்ற
போதுதான் தவறுகள் கூடுதலாக அரங்கேறுகின்றன என்பதை, ஏனோ பெற்றோர்கள் சிந்திக்க மறந்து விடுகிறார்கள்.
உதாரணமாக:
இக்காலத்தில் சிலர் பெண்கள் தனிமையாக செல்லும் போது தேவையற்ற வார்த்தைகளை கூறி
வார்த்தைகளால் அப்பெண்களை அவமானப்பட வைப்பதையே பொழுதுபோக்காக கொண்டுள்ளனர்.இதுவே
தனது நண்பனோ அல்லது உடன் சகோதரனுடனோ போகும் போது கொஞ்சம் அடங்கி
இருப்பார்.வீட்டில் உள்ள ஆண்கள் எந்நேரமும் வீட்டு பெண்களுக்கு காவலாகவே இருக்க
முடியாது.
ஒரு பெண் வீட்டிலேயே இருப்பதில்லை.வெளியில் பள்ளிகூடத்துக்கோ,
வகுப்பிற்கோ அல்லது தொழிலுக்கு சென்றால் கூட அவளுக்கு நம்பிக்கையான ஒரு நண்பன்
இருந்தால் பயமின்றி போய் வரலாம். பாதையில் “தனிமையாக போகிறாளே என்ன நடக்குமோ” என வீட்டில்
உள்ளவர்களும் பயப்படாமல் இருக்கலாம்.எதேச்சியாக இடையில்
போகும் வாகனங்கள் உடைந்தாலும் அந்த வாகனத்தில் வந்த ஆண்கள் தான் குறிப்பிட்ட
இடத்திற்கு போய் சேரவேண்டுமே என நினைப்பரே தவிர இவர்கள் பாவம் என பெண்களுக்கு
பாதுகாப்பாக நிற்பதில்லை. இதுவே அந்த இடத்தில் ஒரு உண்மையான நண்பன் இருந்தால் தனது
நண்பியை பாதுகாப்பாக வீட்டுக்கு அனுப்பி வைக்கவேண்டுமென்றே நினைப்பான்.
ஆனால் வீடு
மட்டுமே உலகமாக்கப்பட்டு வளரும் சில பெண் பிள்ளைகள் வீட்டுக்கு வந்து போகும்
அண்ணனின் நண்பனையோ அல்லது பக்கத்து வீட்டு யன்னலில் தெரியும் வாலிபனையோ காதலிக்கத்
தொடங்கி விடுகிறார்கள்.
இதிலிருந்தாவது
பெற்றோர்கள், பிள்ளைகளைக்
கட்டி வைப்பதால், அவர்கள் மனதையோ
உணர்வுகளையோ கட்டிவைக்க முடியாது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அத்தோடு இப்படி
வளர்க்கப்படும் பெண்பிள்ளைகள் உலகத்தைக் காணத் தவறிவிடுகிறார்கள். மனிதர்களின்
நியமான குணங்களைப் புரிந்து கொள்ள முடியாமற் போய் விடுகிறார்கள். தமது
வட்டத்துக்குள் தாம் சந்திக்கும் யாராவது ஒரு ஆண்மகனை (அவன் அண்ணனின் நண்பனோ,
அல்லது பக்கத்து வீட்டு
யன்னலில் தெரிபவனாகவோ இருக்கலாம்) அவன் நல்லவனா, கெட்டவனா, தனக்குப் பொருத்தமானவனா என்று தெரியாமலே கண்
மூடித்தனமாய் காதலிக்கத் தொடங்கி விடுகிறார்கள். எந்த வித முன் யோசனையுமின்றி கல்யாணத்துக்குத்
தயாராகியும் விடுகிறார்கள்.
ஆனால் வெளியில்
போய் ஆண், பெண் என்ற
பேதமின்றி எல்வோருடனும் நட்புடன் பழகும் ஒரு பெண், யாராவது ஒருவனைக் கண்டவுடன் காதலிக்க மாட்டாள்.
நட்புடன்தான் பழகுவாள்.
இப்படிப் பலருடன்
நட்புடன் பழகும் போது யாராவது ஒருவரின் குண இயல்புகள், பழக்க வழக்கங்கள் அவளுக்குப் பிடிக்கும் போது,
அங்கு அது காதலாகவும்
மலரலாம். இந்தக் காதல் தப்பு என்று கருதவேண்டிய அவசியம் இல்லை. இந்தக் காதல்
ஒருவகையில் நல்லதும் கூட. ஒருவரையொருவர் ஓரளவு முதலே தெரிந்து கொண்ட இவர்களின்
மணவாழ்வு பெரும்பாலும் புரிந்துணர்வும், ஒற்றுமையும் மிகுந்ததாகவே இருக்கும்.
ஆண்கள்
கெட்டவர்கள், பெண்கள்
நல்லவர்கள் என்றில்லை. நல்லவர்களும் கெட்டவர்களும் இருபகுதியிலும் உள்ளார்கள்.
அந்தக் கெட்டவர்கள் ஏன் உருவானார்கள் என்பதைத்தான் நாம் ஆராய்ந்து
பார்க்கவேண்டும்.
இங்கு நாம்
எடுத்துக் கொண்ட விடயத்துடன் பார்த்தால், ஆண் பெண் என்ற பாகுபாடின்றி வளரும் போது பெண் பிள்ளைகளுடன் கதைப்பதை, ஒரு சாதனையாக ஆண் பிள்ளைகள் கருதவே மாட்டார்கள்.
கதைப்பதற்கென்றே அலையவும் மாட்டார்கள். எமது வாழ்க்கை முறையின் தவறினால்தான்
இந்தத் தப்புகள் எல்லாம்.
சின்ன
வயதிலிருந்தே பால் பாகுபாடின்றி ஒன்றாக நட்புடன் வளரும் பிள்ளைகள் மத்தியில்
ஏற்படும் தவறுகளைவிட, "நீ ஆண், நீ பெண்" என்று பிரித்து தனிமைப் படுத்தப்பட்டு
வளர்க்கப்படும் பிள்ளைகளின் மத்தியில்தான் தவறுகள் அதிகமாக ஏற்படுகின்றன.
12, 13 வயதுகளின் பின்,
ஒரு பெண் பிள்ளைக்கு பெண்
நண்பிகளைத் தவிர, வேறு ஆண்
நண்பர்களே இல்லாத போது அவளுக்கு யாராவது ஒரு ஆணுடன் பழகும் வாய்ப்பு ஏற்பட்டால்,
உடனேயே அவனில்
இப்படியான
காதலின் போது, இவனுடனான என்
வாழ்வு இனிமையாக அமையுமா? இவன் போக்கும்
என் போக்கும் பொருந்திப் போகுமா....?, என்பது போன்ற பல விடயங்களைச் சிந்தித்துப் பார்க்கும் மனப்பக்குவம் இல்லாது
போய் விடுகிறது. இதே போலத்தான் ஆண் பிள்ளைகளின் நிலையும்.
ஆனால் ஆண் பெண்
என்ற பாகு பாடின்றி நட்புடன் பழகும் பிள்ளைகளிடம், இவன் அல்லது இவள் எனக்குப் பொருத்தமானவளா?
இவன் அல்லது இவளுடன்
காலம் பூராக வாழ முடியுமா..?, என்பது போன்ற பல
விடயங்களைச் சிந்தித்துப் பார்க்கும் மனப்பக்குவம் தாராளமாக இருப்பதைக் கண்கூடாகக்
காணமுடிகிறது.
ஆதலால் ஆண்-பெண்
பால் பாகுபாடின்றிய நட்பு அவசியம். பெண் பிள்ளைகளும் உலகத்தைப் பார்க்க
பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டும்.
அதைவிடுத்து பெண்
பிள்ளைகளை ஆண்களுடன் பழகவிடாது வீட்டுக்குள் வைத்து வளர்ப்பதுதான் சரியென நினைத்து
பிள்ளைகளையும் மனரீதியாக வதைத்து, பெற்றோர்கள்
தம்மையும் தாமே வதைத்துக் கொண்டு, ஏதோ,
"நெருப்பைக் கட்டிக்கொண்டு
வாழ்கின்றோம்." என்று சொல்வது அனாவசியச் செயலே.
ஆனாலும் இக்காலத்தில் வெறும் பொழுதுபோக்கிற்காக பழகும் பாய்பிரண்டுகளும் அனேகம். நல்ல நட்புடன் இருப்பவர்கள் கொஞ்சப்பேர் தான். எனவே ஆண்-பெண் நட்பு என்பது நல்லது என்றாலும் பெண்கள் ஒருவருடன் நண்பனாகும் முன்பு அவரை பற்றி நிச்சயம் முழுமையாக தெரிந்து கொள்வது நல்லது.புரிதலும், தெளிவும் இல்லாத பழக்கம்தான் இன்றைய சீரழிவு நிலைக்கு முக்கிய காரணம்.
எந்த ஆணாக இருந்தாலும் அவர்கள் நட்பு எல்லைக்குட்பட்டது என்பதை பெண்கள் நினைவில் வைக்க வேண்டும்.அந்த எல்லையைத் தாண்டினால் அளவுக்கு மீறிய பிரச்சினைகளையும், தொல்லைகளையும் சந்திக்க வேண்டியதிருக்கும் என்பதை மறந்து விடக்கூடாது.
ஆனாலும் இக்காலத்தில் வெறும் பொழுதுபோக்கிற்காக பழகும் பாய்பிரண்டுகளும் அனேகம். நல்ல நட்புடன் இருப்பவர்கள் கொஞ்சப்பேர் தான். எனவே ஆண்-பெண் நட்பு என்பது நல்லது என்றாலும் பெண்கள் ஒருவருடன் நண்பனாகும் முன்பு அவரை பற்றி நிச்சயம் முழுமையாக தெரிந்து கொள்வது நல்லது.புரிதலும், தெளிவும் இல்லாத பழக்கம்தான் இன்றைய சீரழிவு நிலைக்கு முக்கிய காரணம்.
எந்த ஆணாக இருந்தாலும் அவர்கள் நட்பு எல்லைக்குட்பட்டது என்பதை பெண்கள் நினைவில் வைக்க வேண்டும்.அந்த எல்லையைத் தாண்டினால் அளவுக்கு மீறிய பிரச்சினைகளையும், தொல்லைகளையும் சந்திக்க வேண்டியதிருக்கும் என்பதை மறந்து விடக்கூடாது.