ரம்புட்டான் சாப்பிடுவதால் நோயில்லை.

மே, ஜுன், ஜூலை மாதங்கள் பொது­வாக ரம்­புட்­டான் சீச­னாக இருக்கும். மல்­வான ரம்­புட்டான் மிகவும் பிர­சித்­­மா­னது. 

ரம்­புட்­டா­னுக்கு காய்ச்­சலா?
சீசன் காலத்தில் வீதி ஓர­மெல்லாம் தற்­கா­லிக கடைகள், லொறிகள் இவற்றில் எல்லாம் மதா­ளித்த சிவத்த கம்­பளிப் பூச்­சிகள் போலப் பழங்கள் குவிந்து கிடக்கும். வழ­மை­யான பழக்­­டை­­ளிலும் கூடை நிறைய வைத்­தி­ருப்­பார்கள்.
பிள்­ளைகள் மட்­டு­மல்ல பெரி­­வர்­களும் ரம்­புட்டான் அமுக்­கு­வதில் பின்­நிற்­­தில்லை. இவ்­வாறு ரம்­புட்டான் சாப்­பிட்­­வர்­களில் சிலர் காய்ச்­­லுடன் வரு­கி­றார்கள். ரம்­புட்டான் காய்ச்சல்என்று தாங்­­ளா­கவே நாமம் சூட்­டி­வி­டு­கி­றார்கள். அதே வேளை ரம்­புட்டான் சாப்­பி­டாத பலரும் இப் பருவ காலத்தில் காய்ச்­­லுடன் வரு­கி­றார்கள்.

காய்ச்சல் என்­பது தனி ஒரு நோயல்ல என்­பதை நீங்கள் எல்­லோரும் அறி­வீர்கள். தடிமன், காய்ச்சல், டெங்குக் காய்ச்சல், மலே­ரியாக் காய்ச்சல், தைபொயிட் காய்ச்சல் எனப் பல­வகை இருக்­கின்­றன. இவை யாவம் கிரு­மிகள் தொற்­று­­தா­லேயே வரு­கி­றது.

ரம்­புட்டான் சாப்­பி­டு­வதால் எவ்­வித காய்ச்­சலும் வரு­­தில்லை. ஆனால் இது பர­­லாகக் கிடைக்கும் காலங்­­ளான ஜுன், ஜூலை மாதங்­களில் பெரும்­பாலும் தென்­னி­லங்­கையில் மழை பெய்­­துண்டு. வெயி­லுடன் மழையும் மாறி மாறி வரும் இம் மாதங்­களில் டெங்கு முதல் சாதா­ரண காய்ச்­சல்கள் எனப் பல்­வேறு தொற்று நோய்கள் பர­வு­கின்­றன நுளம்பு கடிப்­பதால் டெங்குக் காய்ச்சல், மலே­ரியா போன்­றவை வரு­கி­ன்றன. எலி­களின் எச்­சங்­களால் எலிக்­காய்ச்சல் பர­வு­கி­றது. நோயுள்­ளவர் தும்­மு­­தாலும் இரு­மு­­தாலும் தொற்­று­கி­றது பன்றிக் காய்ச்சல்.


எப்­படி உண்­பது

நெல்­லிக்காய், மங்­குஸ்தான், மாம்­பழம், கொய்­யாப்­பழம் போன்ற எந்தப் பழத்தை வாங்­கி­னாலும் அவற்றை உண்ண முன்னர் நன்கு கழு­விய பின்­னரே உண்ண வேண்டும் என்­பது தெரிந்­ததே. பழத்தின் உட்­புறம் கிரு­மிகள் தீண்­டாது சுத்­­மாக இருக்கும் என்ற போதிலும் அவற்றின் தோலா­னது பல­வித அழுக்­கு­­ளாலும் கிரு­மி­­ளாலும் மாச­டைந்­தி­ருக்கக் கூடும்.

ஏனெனில் பழங்­களை பிடுங்கி நிலத்தில் போட்­டி­ருப்­பார்கள். நிலத்தில் நாய், பூனை போன்ற பிரா­ணி­களின் மலம், குரு­வி­களின் எச்சம், மனி­தர்­களின் கழி­வுகள் போன்ற பல­வற்­றி­லி­ருந்த கிரு­மிகள் பழத்தின் தோலை மாசு­­டுத்­தி­யி­ருக்கும். பழங்­களை பறித்த இடங்­­ளி­லி­ருந்து விற்­பனை செய்யும் இடத்திற்கு கொண்­டு­வரப் பயன்­­டுத்தும் பைகள் சாக்கு போன்­­வற்றில் இருந்தும் கிரு­மிகள் பர­வி­யி­ருக்கும். அதே­போல தெரு­வோரம் வைத்து விற்­கும்­போதும் காற்­றி­லி­ருந்தும் பழங்­களைக் கையாளும் மனி­தர்­களின் கரங்­­ளி­லி­ருந்தும் பல­வி­­மான கிரு­மிகள் அவற்றின் தோலில் படிந்­தி­ருக்க வாய்ப்­புண்டு.

என­வேதான் ரம்­புட்டான் முதல் வேறு எந்தப் பழத்தை வாங்­கி­னாலும் சாப்­பிட முன்னர் நன்கு கழு­­வேண்டும். இரண்டு தட­வை­­ளா­வது கழுவ வேண்டும். அல்­லது ஓடும் நீரில் கழுவ வேண்டும்.

கழு­விய பின்­னரும் கூட ரம்­புட்டான் தோலை வாயினால் கடிக்க வேண்டாம்.


கத்­தி­யினால் தோலை வெட்டி அகற்­றிய பின்னர் மீண்டும் கைகளை நீரினால் கழுவி அதன் பின்­னர் பழத்தை எடுத்து உண்­ணுங்கள். சுத்­தப்­­டுத்­திய பழங்­களைச் சாப்­பி­டு­வதால் நோய்கள் எதுவும் தொற்­றாது. உள்­ளி­ருக்கும் சுளைகள் சுத்­­மா­னவை.


நன்றி : வீரகேசரி