பயன் தரும் சோற்றுக்கற்றாளை.

கற்றாளையில் சோற்றுக் கற்றாளை, பெருங் கற்றாளை, சிறு கற்றாளை, கருங் கற்றாளை, செங்கற்றாளை, இரயில் கற்றாளை எனப் பலவகை உண்டு. இதில் சோற்றுக் கற்றாளை மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. பச்சையாக உள்ள சோற்றுக் கற்றாளை பலவகையில் உடல் வெப்பத்தைத் தணிக்கிறது.இதன் மருத்துவக் குணங்களை பார்ப்போமானால்,

*   இதன் ஜெல்லை முகத்தில் தேய்த்துக் கழுவி வந்தால் முகம்  பளிங்கு  போல ஜொலிக்கும்.
கற்றாளை ஜெல்லை பசு மோரில் கலந்து குடித்து வர உடல் சூட்டினால் முகத்தில் வரும் பருக்கள், வெயிலினால் தோலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் கருந்திட்டுக்கள் மறைந்து போகும்.

*   உடலில் கஸ்தூரி மணம் வீசும். சருமம் வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன்      ஜொலிக்கும்.

*   கற்றாளை ஜெல்லை சுத்தமான நீரில் 6 முறை கழுவி சுத்தம் செய்து,                      தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர  உடலில் சத்து                  கூடும்,இளமை என்றும் ஊஞ்சலாடிக் கொண்டே இருக்கும்.

*  கற்றாளை மடலைக் கீறி சாறெடுத்து, அதை தேங்காய் எண்ணெயுடன்                 கலந்து 40 நாள் வெயிலில் வைத்து இதை தலைக்கு தொடர்ந்து
    தேய்த்து வர தலைமுடி நன்கு செழித்து வளரும்.

*  வெயில் காலத்தில் சிலருக்கு கண்களில் எரிச்சல் உண்டாகி, கண்கள்                   சிவந்து விடும். அப்போது, கற்றாளையின் ஒரு துண்டை எடுத்து அதன்
    நுங்குப் பகுதி வெளியே தெரியும்படி இரண்டாகப் பிளந்து, கண்களை மூடி           கண்களின் மீது அந்தத் கற்றாளை துண்டை வைத்துக்கொண்டு சற்று
   நேரம் அப்படியே படுத்திருக்க வேண்டும். இப்போது கண் எரிச்சல்,                           குறைவதோடு, சிவந்த நிறமும் மறைந்து விடும். இதை இரவு நேரங்களில்         தூங்குவதற்குமுன்  செய்து வந்தால் நல்ல உறக்கம் வருவதோடு, உடலுக்கு     பல நன்மைகளும்  கிடைக்கும்.

* சிலருக்கு தூங்கி எழுந்ததும் பாதத்தின் அடியில் எரிச்சலாக இருக்கும்.                 இதைப்போக்க இரவு படுக்கும்முன் கற்றாளையின் ஜெல்லை பாதத்தின்             அடியில் தடவிக் கொண்டு படுக்கலாம். பாத எரிச்சல்  குறைவதோடு,
  பாத  வெடிப்புகளும் குணமாகும்.

* சோற்றுக் கற்றாளையில் செய்த தைலத்தை தலைக்குத் தேய்த்துக்                        குளிப்பதால் உடல் சூடும், எரிச்சலும் குறைந்து உடல் குளிர்ச்சியடையும்,            உடலில் எந்தப் பிரச்சினையும் இல்லாதவர்கள் இந்த எண்ணெய்யை                      தினமும்  தலைக்குத் தடவி வரலாம்.வாரம் இருமுறை இந்த எண்ணெய்யை    உடலுக்குத் தேய்த்து குளிப்பதால் உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும்.