பயனளிக்கும் தேசிக்காய்.


எலுமிச்சை சாற்றைய தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் இளஞ்சூடான  குடிப்பதால் பல நன்மைகள் உண்டு. எமது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது... எலுமிச்சையில் நிறைய விட்டமின் சீ அடங்கியுள்ளதால், தடிமன் முதலிய சிறு நோய்களில் இருந்து பாதுகாக்கிறது.... பொட்டாசியம் மூளை, நரம்பு கடத்துகையை சீராக்கிறது. குருதிச் சுற்றோட்டத்தை கட்டுப்படுத்துகிறது.

 உடலின் pH ஐ சீராக்குகிறது அதாவது எலுமிச்சைச் சாறில் சிட்ரிக் அமிலம் இருக்கிறது... ஆயினும், சமிபாட்டு செயன்முறையால், அது மூலச்சேர்க்கையாக மாறி, உடலின் அமிலத்தன்மையை நீக்குகிறது.

எலுமிச்சையில் உள்ள பெக்டின் நார்ப்பொருள் பசியைக் குறைக்கிறது. மூலத்தன்மையுள்ள உணவுகளை அதிகம் உண்பவர்கள் மெலிவான உடல்வாகை கொண்டிருப்பது நிருபணமான உண்மை.

* சமிபாட்டை வேகப்படுத்துகிறது...

* சிறுநீர்த் தொகுதியைச் சுத்திகரிக்கிறது.

* தோலில் ஏற்படும் கரும்புள்ளிகள், சுருக்கங்களைக் குறைக்கிறது...

* வாய்த்துற்நாற்றத்தை போக்கி, சீரான சுவாசம் தருகிறது..

* நுரையீரல் தொற்றுக்களை குறைக்கிறது.

* stress ஐ குறைக்கிறது
இது விட்டமின் சீ காரணமாய் இருக்கலாம் என்பது தியறி... ஆனால் நிருபிக்கப்படவில்லை...

* காலையில் டீ அல்லது கோப்பி குடிக்கும் கெட்ட பழக்கத்தை நீக்குகிறது.