மென்மையான காதலை மையமாக வைத்து உருவாகும் வலியவன்.

‘எங்கேயும் எப்போதும்’. ‘இவன் வேற மாதிரி’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய சரவணன், தற்போது இயக்கி வரும் படம் ‘வலியவன்’. இதில் நாயகனாக ஜெய் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக ஆண்டிரியா நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் அழகம் பெருமாள், பண்ணையாரும் பத்மினியும் பாலா மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தை எஸ்.கே.ஸ்டுடியோஸ் சார்பில் சம்பத் அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.
மென்மையான காதலை மையமாக கொண்டு உருவாகும் இப்படம், அனைவரும் ரசிக்கும் வகையில் ஜனரஞ்சகமான முறையில் நேர்த்தியாக எடுக்கப்பட்டு வருகிறது.

இப்படத்தின் முதற்கட்ட படபிடிப்பு சென்னையில் துவங்கி தொடர்ந்து டெல்லியில் நடைபெற்றது. மேலும் படத்தின் முக்கிய காட்சிகள் ஹரித்துவார் மற்றும் குலுமணாலியில் படமாக்கப் படவுள்ளன. தினேஷ் கிருஷ்ணா ஒளிப்பதிவை செய்து வரும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார்.