ரசிகர்களுடன் கத்தி வெற்றியை கொண்டாடும் விஜய்-முருகதாஸ்!

கத்தி படத்தின் முதல்நாள் வசூலை வெளியிட்ட ஏ.ஆர்.முருகதாஸ், இதுவரை தமிழில் ரஜினியின் எந்திரன் படம்தான் முதல் நாள் வசூலில் முதலிடம் பிடித்து வந்தது. அதற்கடுத்து, அஜீத்தின் ஆரம்பம் இருந்தது. ஆனால் இப்போது கத்தி படம் அந்த இரண்டு படங்களையுமே பின்தள்ளி விட்டு முதலிடத்தை கைப்பற்றியுள்ளது என்று டுவிட் செய்திருந்தார்.

ஆனால் இதற்கு அஜீத் ரசிகர்கள் எந்த ரியாக்சனும் காட்டாதபோதும், ரஜினியின் ரசிகர்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அதோடு வேலாயுதம் படத்தில் இருந்து விஜய் நடித்த படங்களின் முதல் நாள் வசூலை வெளியிட்டு கிண்டல் செய்யும் வகையில் கமெண்ட்டுகளும் கொடுத்து வருகின்றனர்.

ஆனால் இப்படி ரசிகர்களின் காரசார மோதல் இணையதளங்களில் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் கத்தி வெளியாகியுள்ள தியேட்டர்களில் விஜய்யின் ரசிகர்கள் மகிழ்ச்சியை கொண்டாடி வருகிறார்கள். குறிப்பாக, கோவையில் உள்ள இந்துஸ்தான் கல்லூரியில் இன்று கத்தி படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் பெரிய அளவில் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் இருவரும் கலந்து கொள்கிறார்கள். இதையடுத்து ஏராளமான விஜய் ரசிகர்கள் கோவையை நோக்கி படையெடுததுள்ளார்களாம்.