தந்தை முத்துராமனின் சொத்தில் கார்த்திக்கிற்கு பங்கு இல்லையாம்!

பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை படத்தில் அறிமுகமானவர் கார்த்திக். நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ள இவர், மறைந்த நடிகர் முத்துராமனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது தந்தையின் வீட்டில்தான் அம்மா சுலோச்சனா மற்றும் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். அதோடு அவரது தந்தை வாங்கிய மேலும் பல சொத்துக்களும் அந்த பகுதியில் உள்ளது.

இந்த நிலையில், கார்த்திக்கின் சகோதர, சகோதரிகள், சொத்துக்கள் அனைத்தும் தங்கள் பெயரில் உள்ளது என்று சொல்லி, கார்த்திக்கை அந்த வீட்டில் இருந்து வெளியேறுமாறு கூறினார்களாம். அவர்கள் காண்பித்த சொத்து பத்திரத்தில் தனது பெயர் இல்லாததால் அதிர்ச்சியடைந்த கார்த்திக் அவர்களிடம் சண்டை போட்டிருக்கிறார்.


இதையடுத்து தந்தை சொத்தில் எப்படி எனக்கு பங்கு இல்லாமல் போகும் என்று அவர்களிடம் நியாயம் கேட்ட கார்த்திக்கிற்கு உரிய பதில் கிடைக்காததால், தற்போது அந்த வீட்டை விட்டு வெளியேறி விட்டாராம். மேலும், இந்த விசயத்தை அவர் சட்டரீதியாக சந்திக்கவும் தற்போது வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து வருகிறாராம்.