அழகை பாதுகாக்கும் முலாம்­பழம்.

தலை முதல் பாதம் வரை அழகைப் பாது­காக்கும் அற்­புத கவசம் கிர்­ணிப்­பழம். இதை முலாம்­பழம் என்றும் அழைப்பர். இதில் புர­தமும் கொழுப்­புச்­சத்தும் அதிகம் இருப்­பதால்கேசத்­துக்கு உறு­தி­யையும் சரு­மத்­துக்குப் பொலி­வையும் கொடுக்­கி­றது. உட­லுக்கு வேண்­டியச் சத்­துக்­களை அள்­ளித்­தரும் வள்­ள­லான கிர்­ணிப்­ப­ழத்தின் அழகுஆரோக்­கியக் குறிப்­பு­களை இங்கு தெரிந்து கொள்வோம்.

ஐம்­பது வய­துக்கு மேல் தோலின் எண்ணெய்ப் பசை குறைந்து வறண்டு போய்­விடும். இவர்கள் அழகு நிலையத்தில் வெக்சிங் அல்­லது திரெடிங் போன்­ற­வற்றைச் செய்து கொண்டால்தோலில் வீக்கம் ஏற்­பட்டு விகா­ர­மாகத் தோன்றும். இதற்கு கிர்­ணிப்­பழ ஜுஸ்வெள்­ளரி ஜுஸ் இரண்­டையும் தலா ஒரு டீஸ்பூன் கலந்து தட­வினால் வீக்கம் குறைந்து தோல் மிரு­து­வாகும்கிர்­ணிப்­பழ விதையைக் காய வைத்து அரைத்த பவுடர்கிராம் எடுங்கள்.
இதை பேஸ்ட்­டாக்கும் அள­வுக்கு வெள்­ளரி ஜுஸ் சேர்த்து. கேசம் முதல் பாதம் வரை தேய்த்துக் குளி­யுங்கள். எண்ணெய் தேய்த்துக் குளித்­தது போல குளிர்ச்­சி­யா­கவும் வாச­னை­யா­கவும் இருக்கும். ஓட்ஸ்சரு­மத்­துக்கு நல்ல நிறத்தைத் தந்து தோலில் உள்ள கரும்­புள்­ளி­களை மறையச் செய்யும். கிர்ணி விதைதலை­மு­டிக்கு நல்ல கண்­டி­ஷ­ன­ராக செயல்­படும்.

சில­ருக்கு முகத்தில் அடிக்­கடி வியர்த்துக் கொட்டி. முகம் டல்­ல­டிக்கும் முகத்தில் பூசி கழு­வினால் முகம் பளிச்­சென்று இருக்கும். நூறு கிராம் கிர்ணி விதை­யுடன் பயத்தம் பருப்புசீயக்காய் தலா கால் கிலோ சேர்த்து அரைத்து வாரம் ஒரு­முறை தலையில் தேய்த்து குளித்து வந்தால்தலை­முடி சுத்­த­மா­வ­தோடு பள­ப­ளப்பும் கூடும்.இரண்டு டீஸ்பூன் வெள்­ளரி ஜுஸுடன்இரண்டு டீஸ்பூன் கிர்­ணிப்­பழ விழுதைச் சேர்த்து துளி எலு­மிச்சைச் சாறு கலந்து ஸ்ப்ரே போத்­தலில் வைத்து நன்­றாகக் குலுக்கி ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள். எங்­கா­வது வெளியில் போகும் போது இதை இயற்கை சென்ட் ஆகப் பயன்­ப­டுத்­தலாம். மாதங்கள் வரை கெடாது. தோலையும் சேதப்­ப­டுத்­தாது. விருப்­பப்பட்டால் பன்னீர் சேர்த்துக் கொள்­ளலாம்.

சில­ருக்கு கை,கால்முகத்தில், தேவை­யில்­லாத முடிகள் முளைக்கும் இதற்கு பழ விதை பவுடர் ஓட்ஸ் பவுடர் கோரைக்­கி­ழங்கு பவுடர் ஆவா­ரம்பூ பவுடர் தலா கிராம் எடுத்து பேஸ்ட்டைத் தேய்த்துக் குளி­யுங்கள். கிர்­ணிப்­பழ விதை கோரைக்­கி­ழங்கு ஓட்ஸ் பவுடர் மூன்றும் முகத்தில் உள்ள முடியை வலு­வி­ழக்கச் செய்து தோலை மிரு­து­வாக்கும். ஆவாரம் பூ சரு­மத்­துக்கு நல்ல நிறத்தைக் கொடுக்கும். வயோ­தி­பத்தின் அறி­குறி கண்­களில் தான் முதலில் தெரியும். பால் பவுடர்கிர்­ணிப்­பழ விதை பவுடர் இரண்­டையும் சம அளவு எடுத்துதண்­ணீரில் கலந்து கண்­களைச் சுற்­றிலும் பூசி30 நிமிடம் கழித்துக் கழு­வுங்கள். சுருக்கங்கள் சோர்வு நீங்கி கண்கள் பிரகாசிக்கும். கடுகு எண்ணெயுடன் கிர்ணி விதை பவுடரை கலந்து பாதங்களில் பூசினால் பஞ்சு போல் மிருதுவாகும்.