இந்த தீபாவளியின் போட்டியாளர்கள் முருகதாஸ்-ஹரி!

இந்த தீபாவளியில் ஷங்கரின் ஐ படமும் திரைக்கு வருவதாக இருந்தால் ஒரு மும்முனைப்போட்டி ஏற்பட்டிருக்கும். ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், ஹரி ஆகியோர் களத்தில் நின்றிருப்பார்கள. அதேபோல், விஜய், விக்ரம், விஷால் ஆகியோரும் வரிந்து கட்டியிருப்பார்கள்.

ஆக ஒரு பெரிய போட்டி யுத்தமே நடந்திருக்கும். ஆனால், இப்போது ஐ படம் போட்டியில் இருந்து விலகிக்கொண்டதால், விஜய் படத்துக்கும், விஷால் படத்துக்குமே நேரடிப்போட்டி ஏற்பட்டுள்ளது. ஆனால், விஷால் விஜய்க்கு சமமான போட்டியாளர் இல்லை என்பதால், இதை டைரக்டர்கள் ஏ.ஆர்.முருகதாசுக்கும், ஹரிக்குமிடையே நடக்கும் போட்டியாகத்தான் எடுத்துக்கொள்ள முடிகிறது.


குறிப்பாக, இவர்கள் இருண்டு பேருமே தொடர்ந்து மெகா ஹிட் படங்களாக கொடுத்து வருபவர்கள். விஜய்யை வைத்து முருகதாஸ் துப்பாக்கியை ஹிட்டாக கொடுத்தார். அதேபோல் ஹரி, விஷாலை வைத்து தாமிரபரணி என்றொரு ஹிட் படத்தை பல ஆண்டுகளுக்கு முன்பே கொடுத்தார். அதனால் இந்த முறையும் அந்த வெற்றி தங்களை தொடர வேண்டும் என்று மேற்படி இரண்டு இயக்குனர்களுமே நினைக்கிறார்கள்.
இதில் கத்தி படத்தைப் பொறுத்தவரை ஆடியோ ரிலீசுக்குப்பிறகு அவர்கள் இன்னமும் மீடியாக்களை சந்திக்காதபோதும், அடுத்து சந்திக்க தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், பூஜை படக்குழுவோ, ஆடியோ விழா, அதற்கடுத்து பிரஸ்மீட் என்று மீடியாக்களை சந்தித்து பப்ளிசிட்டி செய்தனர். அதோடு கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் மீடியாக்களை சந்தித்தார் டைரக்டர் ஹரி.